செய்திகள் :

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக நீடிக்கும்: ரிசர்வ் வங்கி

post image

மும்பை: வங்கிகளின் வட்டி விகிதம் தொடர்பாக 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும்.

இந்நிலையில், அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், சமீபத்திய வட்டி விகிதக் குறைப்புகள் 5.50 சதவிகிதம் மாற்றாமல் நிலையாக வைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது, வட்டி விகிதத்தை ஒருமனதாக நிலைநிறுத்தி, நடுநிலையான நிலைப்பாட்டைத் தொடர முடிவு செய்தது. இதனால் வீட்டு மற்றும் வாகன கடன்களின் மாதாந்திர தவணைகள் மாறாமல் நிலையாக இருக்கும்.

உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்து நீடித்துள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. அதே வேளையில், பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருந்தாலும், இது பெரும்பாலும் நிலையற்ற உள்ள உணவு விலைகள் காரணமாகும் என்றார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.

ஆர்பிஐ கடந்த மூன்று கூட்டங்களில் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பை அமலாக்கம் செய்துள்ள நிலையில், தற்போது பொருளாதார வளர்ச்சி, பணவீக்க தாக்கத்தை கருத்தில் கொண்டு இக்கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை.

ஜூன் மாதத்தில் பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.10 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும் போது தெரியவரும். அதே வேளையில், இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 6.5 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிப்பு உயர்த்துவதாக அச்சுறுத்தல்களை விடுத்தும், அதிகரித்தும் வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!

எக்ஸில் இருப்பதுபோல... இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம்!

இன்ஸ்டாகிராமில் எக்ஸில் (ட்விட்டர்) இருப்பதுபோல ரீபோஸ்ட் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் என்ற செயலியில் உலகம் முழுவதும் 200 கோடி கணக்குகள் உள்ளன.... மேலும் பார்க்க

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் (ஆக. 7) இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து தாக்கத... மேலும் பார்க்க

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த வார இறுதியில் ரூ. 74,000-ஐ எட்டிய ஆபரணத் தங்கம், இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்றத்தைக் கண்டது. ஒரு ச... மேலும் பார்க்க

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத வளா்ச்சி

இந்தியாவின் சேவைகள் துறை, கடந்த ஜூலை மாதத்தில் முந்தைய 11 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவனமான ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூலை மாதத்தில் நிறு... மேலும் பார்க்க

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி வருவாய் 29% உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி (இந்தியா) லிமிடெட்டின் ஒருங்கிணைந்த வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் 29 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க