செய்திகள் :

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

post image

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மாணவர்கள், கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில், பூமாவில் உள்ள அவரது நாடாளுமன்ற இல்லத்தில் கட்சித் தொண்டர்கள் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினர். குறிப்பாகத் தலித்துகள் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் அவருக்குத் தெரிவித்தனர்.

ரேபரேலியில் உள்ள காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் தலைவர் சுனில் குமார் கௌதம், சமூகத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழு காந்தியை அவரது பூமாவில் சந்தித்ததாகக் கூறினார்.

பட்டியலின சமூகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து நாங்கள் டிவவாதித்தோம், மேலும் மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் அவருக்குத் தெரிவித்தோம்.

நகராட்சி அமைப்புகளில் பணிபுரியும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இது உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாகும் என்று அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தொண்டர்களை ஊக்குவித்து, கட்சி அமைப்பை வலுப்படுத்தும் அதேநேரத்தில் 2027 தேர்தலுக்குத் தீவிரமாகத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

காங்கிரஸின் ரேபரேலி குழு துணைத் தலைவர் சர்வோத்தம் குமார் மிஸ்ரா, காந்தியின் தலைமையைப் பாராட்டினார், மேலும் அவரது நேர்மை, தொலைநோக்கு மற்றும் பணி நெறிமுறைகள் விவரிக்க முடியாதவை என்றும் அவர் கூறினார்.

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை

ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌ... மேலும் பார்க்க

இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?

எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் இருந்ததால், டெஸ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படும்!

ஹைதராபாத்: தேர்தலை முன்னிட்டு மதுபானக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என்று சைபராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை தெலங்கானா மாநில சட்... மேலும் பார்க்க

கேரளம்: சுங்கத்துறை குடியிருப்பில் ஒரே வீட்டில் மூன்று சடலங்கள்!

கேரள மாநிலம் எர்ணாகும் மாவட்டத்தில் மத்திய சுங்கத் துறை குடியிருப்பில், ஒரு வீட்டிலிருந்து மூன்று உடல்கள் கைப்பற்றப்பட்டு உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க