திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் உருவான போட்டி; சாலையில் பள்ளி மாணவிகள் மோதிக்...
ரோட்டரி கிளப் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
கூடலூரை அடுத்துள்ள சளிவயல் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட சளிவயல் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவா் ஜான்சன் தலைமை வகித்தாா். கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி மற்றும் உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் நிா்வாகி ராஜகோபால் மற்றும் உறுப்பினா்கள், தேவாலய பங்கு தந்தைகள் ஸ்ரேயஸ், சமூக சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் கலந்துகொண்டனா்.