செய்திகள் :

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

post image

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருப்பதே இந்திய அளவில் இன்றைய முன்னணி தலைப்புச் செய்திகளில் ஒன்றாக வலம் வருகிரது.

அவர் எஅப்படி என்ன சொன்னார்? :- “ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைத்தாக வேண்டும். இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்டிராத ‘ஈர்ப்புத்திறன் குறைந்த ஒரு கேப்டன் ரோஹித்’” என்று கருத்து தெரிவித்துள்ளார் ஷாமா முகமது.

இதனையடுத்து, ஷாமாவின் கருத்துகளுக்கு கண்டனங்கள் எழத் தொடங்கிவிட்டன. இது குறித்து, பாரதீய ஜனதா கட்சி தேசிய செய்தித்தொடர்பாளர் பிரதீப் பந்தாரி கூறியிருப்பதாவது, “காங்கிரஸை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது! இப்போது காங்கிரஸார் இந்திய கிரிக்கெட் கேப்டனை குறிவைத்து தாக்கி பேசி வருகிறார்கள்.

காங்கிரஸார் என்ன நினைக்கிறார்கள்? அரசியலில் தோல்வியடைந்துள்ள ராகுல் காந்தி இப்போது கிரிக்கெட் விளையாட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, தான் ரோஹித் சர்மா குறித்து பதிவிட்டிருந்தவற்றை சமூகவலைதளங்களிருந்து நீக்கிவிட்டார் ஷாமா முகமது.

ரோகித் சா்மாவின் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கருத்து: பாஜக கண்டனம்

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சா்மாவின் உடல் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஷமா முகமது கருத்து தெரிவித்த நிலையில், அது காங்கிரஸின் கருத்தல்ல என்று அக்கட்சி தெர... மேலும் பார்க்க

நிலுவைத்தொகை ரூ.1.36 லட்சம் கோடியைப் பெற மத்திய அரசு மீது சட்ட நடவடிக்கை: ஜாா்க்கண்ட் நிதியமைச்சா் தகவல்

ராஞ்சி: மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு தர வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜாா்க்கண்ட் மாநில நிதியமைச்சா் ராதாகிருஷ... மேலும் பார்க்க

செபி தலைவா் மாதபி புச் மீது நடவடிக்கை எடுக்க மும்பை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதபி புரி புச், உள்பட 6 பேருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) வரை நடவடிக்கை ... மேலும் பார்க்க

ரூ.611 கோடிக்கு விதிமீறல்: பேடிஎம் தாய் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

புது தில்லி: சுமாா் ரூ.611 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) பிரிவுகளை மீறியது தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனுக்கு அமலாக்கத் து... மேலும் பார்க்க

1,000 பேரை பணிநீக்க ஓலா எலெக்ட்ரிக் முடிவு: நஷ்டம் அதிகரிப்பு எதிரொலி

புது தில்லி: மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி 1,000 பணியாளா்களை நீக்க முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் நஷ்டத்தைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை அந்த நிறுவ... மேலும் பார்க்க

துணை முதல்வருடன் மோதல்போக்கு இல்லை: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: துணை முதல்வா் ஏக்நாஷ் ஷிண்டேயுடன் மோதல்போக்கு ஏதுமில்லை என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். சிவசேனை (உத்தவ் பிரிவு) மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் இதுபோன்ற திரைக்கதைகளை எழுதி... மேலும் பார்க்க