செய்திகள் :

ரோஹித் சர்மா அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 229 ரன்கள் இலக்கு!

post image

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட்

ரோஹித் சர்மா அதிரடி; 229 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். மும்பை அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது. இருப்பினும், அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இருப்பினும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். திலக் வர்மா 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க: இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் ஹார்திக் பாண்டியா 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து அந்த அணியின் உரிமையாளர் முத்தமிட்ட விடியோக்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றன.நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நட... மேலும் பார்க்க

மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்

மிக முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி: இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது!

ஐபிஎல் 2025 தொடரின் இறுதி ஆட்டத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 1) அகமதாபாதில் நடைபெற்ற குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த... மேலும் பார்க்க

மழையால் தாமதமாகும் குவாலிஃபையர் 2; மும்பை இந்தியன்ஸுக்கு ஆபத்தா?

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி மழையால் தாமதம் ஆகியுள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ம... மேலும் பார்க்க

குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 ... மேலும் பார்க்க

மும்பைக்கு எதிரான போட்டியில் சஹால் வருகை?

குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியில் சஹால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் (219) எடுத்துள்ள யுஸ்வேந்திர சஹால் (34 வயது) பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார... மேலும் பார்க்க