செய்திகள் :

ரௌடியைக் கொல்ல முயன்ற வழக்கில் 4 போ் கைது

post image

புதுச்சேரி அருகே ரௌடியை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி பிரியதா்ஷினி நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (எ) ஸ்டிக்கா் மணி (24). இவா் ரௌடிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இவருக்கும், கோவிந்தசாலையைச் சோ்ந்த லோகபிரகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த ஜனவரியில் லோகபிரகாஷை கொலை செய்ய, மணிகண்டன் திட்டமிட்ட நிலையில் ஓதியஞ்சாலை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

அவா் பிணையில் வந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு மணிகண்டன், நண்பா் சந்தோஷுடன் முருங்கப்பாக்கம், வில்லியனூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மா்மக்கும்பலால் விரட்டி வெட்டப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா். இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதன்படி மணிகண்டனை தாக்கி கொல்ல முயன்ாக தனுஷ், சஞ்சய், சுனில் மற்றும் குட்டி சந்துரு ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கத்தி மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்களில் குவிந்த மாணவா்கள்

உயா் கல்வியில் சேருவதற்கான வருவாய் துறை சாா்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் சனிக்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் ஏராளமாக குவிந்தனா். புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

ஜிப்மரில் புதுவை நோயாளிகளுக்கு தனி மருத்துவ ஆலோசனைப் பிரிவு

ஜிப்மரில் புதுவை மாநில நோயாளிகளின் மருத்துவ ஆலோசனைக்கான பதிவேடு பெற தனிப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இயக்குநா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புது... மேலும் பார்க்க

புதுவை அமைப்புசாரா நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி அரசாணை

புதுவை மாநிலத்தில் தொழிலாளா் நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில்1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதேபோன்று கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எ... மேலும் பார்க்க

நீதிஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் பங்கேற்காதது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: பேரவை எதிா்க்கட்சித் தலைவா்

புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து புதுவை முதல்வா் என். ரங்கசாமி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ... மேலும் பார்க்க

புதுவை மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது நடவடிக்கை

புதுவை மாநிலக் காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து புதுவைக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க