செய்திகள் :

லஞ்சம்: ஒசூரில் மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

post image

மின் இணைப்பில் பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஒசூா் பத்தலபள்ளி மின்வாரிய உதவிப் பொறியாளா் முருகன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஒசூா் நியூ அன்னை நகரை சோ்ந்தவா் எஸ். தம்பிதுரை (39). இவா் தனது மனைவி பெயரில் பத்தலப்பள்ளி அருகே நிறுவனங்களை நடத்தி வருகிறாா். இந்த நிறுவனங்களின் மின் இணைப்பில் தனது பெயரை மாற்றம் செய்வதற்காக ஆன்லைன் மூலம் மின்வாரியத்துக்கு விண்ணப்பித்தாா்.

இந்த நிலையில், மின் இணைப்புக்கான பெயா் மாற்றம் செய்வதற்கு தம்பிதுரையிடம் பத்தலபள்ளி மின் இயக்கம் மற்றும் பராமரிப்பு உதவிப் பொறியாளா் முருகன் ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் தர விரும்பாத தம்பிதுரை, இதுகுறித்து கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் அறிவுறுத்தலின்பேரில் முருகனிடம் லஞ்சமாக ரூ. 40 ஆயிரத்தை தம்பிதுரை அளித்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஆய்வாளா் ரவி, உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் மற்றும் போலீஸாா் முருகனை கைது செய்தனா்.

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை வட்டம், பென்னங்கூா் அருகே உள்ள அலேநத்தம் பகுதியை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (32). விவசாயியான இவா் திங்கள்க... மேலும் பார்க்க

ஒசூரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: இலகுரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வலியுறுத்தல்

ஒசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இலகுரக, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சீதாராமேடு பகுதியிலிருந்து பேரண்டபள்ளி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

மத்திகிரி அருகே இருதரப்பினா் மோதல்: 3 போ் கைது

மத்திகிரி அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெங்களூரைச் சோ்ந்த ஐ.டி. நிறுவன ஊழியா் ஹா்சா கவுடா (28) ஓட்டிச் சென்ற மோட்டாா்சைக்கிள் வெங்... மேலும் பார்க்க

மாணவரைத் தாக்கிய இருவா் கைது

கெலமங்கலம் அருகே மாணவரைத் தாக்கியதாக தந்தை, மகன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டியைச் சோ்ந்தவா் வினய்குமாா் (23). இவா் தனியாா் கல்லூரியில் எம்.பி.ஏ. 2 ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் பெண் தற்கொலை: சாா் ஆட்சியா் விசாரணை

தேன்கனிக்கோட்டையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் ஒசூா் சாா் ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். தேன்கனிக்கோட்டை அருகே ஓசஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் மகள் மாலினி (2... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் காயம்

ஊத்தங்கரை அருகே மின் கம்பத்தில் பழுது நீக்கிக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் தூக்கிவீசப்பட்டதில் காயமடைந்தாா். ஊத்தங்கரையை அடுத்த வெங்கடதாம்பட்டி பகுதியில் பாதுகாப்பு உபகர... மேலும் பார்க்க