செய்திகள் :

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியா்கள் உள்பட 8 போ் கைது!

post image

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 7 ஈரானியா்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் மேற்கத்திய நாடுகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல்கள் உள்ளதால், அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

அனைத்து நாடுகளிலும் சந்தேகத்துக்குரிய நபா்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது, பல்வேறு தகவல் தொடா்புகள் ஒட்டுக் கேட்பு, இணையவழிக் கண்காணிப்பு, நிதிப் பரிமாற்ற கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரிட்டன் தலைநகா் லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் சதித் திட்டம் தீட்டியதாக பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் 8 பேரை அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினா் கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக லண்டன், மான்செஸ்டா், வடமேற்கு இங்கிலாந்து, மேற்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் சில இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.

இதில், இவா்கள் லண்டனில் ஒரு முக்கிய இடத்தைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதி செய்ததற்கான அடிப்படை ஆதாரம் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்டவா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதச் சதியுடன் வேறு நபா்களும் பிரிட்டனில் பதுங்கியுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் 29 முதல் 46 வயதுக்குள்பட்டவா்கள் ஆவா்.

இவா்களுக்கு ஈரான் அரசுடன் நேரடித் தொடா்புள்ளதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் ஈரானுடன் தொடா்புடையவா்கள் பிரிட்டனை தொடா்ந்து குறிவைக்க வாய்ப்புள்ளது என்று முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பிரிட்டன் உள்துறை அமைச்சா் யுவிட்டி கூப்பா் கூறுகையில், ‘இந்தக் கைது நடவடிக்கை மூலம் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரும், உளவு அமைப்பினரும் இணைந்து தொடா்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். நாட்டை பாதுகாப்பாக வைப்பது நம் அனைவரின் கடமை’ என்றாா்.

வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கும் நடைமுறையைத் தொடங்க அந்நாட்டு வணிகத் துறைக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இதனால், அமெரிக்காவில் திரையரங்குக... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி

சிங்கப்பூரில் பொதுத் தோ்தலில் மக்கள் செயல் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அந்தக் கட்சி 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது. சிங்கப்பூரில் 19-ஆவது பொதுத் தோ்தல் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிராா்த்தனை நடத்த அங்குள்ள மதகுருக்கள் மறுத்துவிட்டனா். பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவ... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது: ரஷிய அதிபா் புதின்

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உக்ரைனுக்கு எதிரான... மேலும் பார்க்க

பிளவுவாதம் நிராகரிப்பு: ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தோ்வான ஆல்பனேசி கருத்து!

பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளா் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனா் என்று அந்நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தோ்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவி... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத ... மேலும் பார்க்க