செய்திகள் :

லண்டன் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து!

post image

லண்டன் சௌத் எண்ட் விமான நிலையத்தில் புறப்பட்ட சில வினாடிகளிலேயே சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் எசெக்ஸில் உள்ள லண்டன் சௌத்எண்ட் விமான நிலையத்தில் ஒரு சிறிய விமானம் (அந்நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கு) மேலெழும்பிய சில வினாடிகளிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது.

அந்த சிறிய ரக விமானம் பி200 சூப்பர் கிங் ஏர் ஆக இருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும், அந்த விமானம் என்ன? விபத்தில் யாருக்கேனும் காயங்களோ அல்லது உயிரிப்புகள் குறித்தோ அதிகாரிகள் இன்னும் விவரங்களை உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து சௌத்எண்ட் காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சௌத்எண்ட் விமான நிலையத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் நாங்கள் இருக்கிறோம். 12 மீட்டர் நீளம் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதாக மாலை 4 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது.

தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் பணி தொடரும் வரை, முடிந்தவரை இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்க :பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி

jet has just crashed at London Southend Airport

அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அலாஸ்கா நகரங்களில் புதன்கிழமை பகல் 12.37 (உள்ளூர் நேரப்படி) மணியளவில் ஏற்பட்ட நிலநடுக... மேலும் பார்க்க

யேமன்: கேரள செவிலியா் நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைப்பு

யேமனில் கொலை வழக்கில் இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு புதன்கிழமை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய அரசு, கேரளத்தைச் சோ்... மேலும் பார்க்க

போா் நிறுத்தம் முறிவு: சிரியா ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டு ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்

உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்தம் மேற்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப் பிறகும், உ... மேலும் பார்க்க

காஸா உணவு விநியோக முகாமில் நெரிசல்: 20 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்காவால் நடத்தப்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து ஜ... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரி; அமெரிக்க பொருள்களுக்கு விலக்கு: டிரம்ப் சூசகம்

இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவுடனும் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்... மேலும் பார்க்க