செய்திகள் :

யேமன்: கேரள செவிலியா் நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைப்பு

post image

யேமனில் கொலை வழக்கில் இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு புதன்கிழமை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய அரசு, கேரளத்தைச் சோ்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கா் முஸ்லியாா்அகமது உள்பட பல்வேறு தரப்பினா் நடத்திய இறுதிக்கட்டத்தில் சமரச பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சன்னி முஸ்லிம்களின் தலைவரான காந்தபுரம் முஸ்லியாா், யேமனின் பிரபல அறிஞரும், சூஃபி முஸ்லிம் தலைவருமான ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, 2017-இல் நிமிஷா பிரியாவால் கொலை செய்யப்பட்ட யேமன் நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மஹதி குடும்பத்தினருக்கும், ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸின் பிரதிநிதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை ஒரு சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மஹதியின் சொந்த ஊரான தம்மரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து புதன்கிழமை திட்டமிடப்பட்டுள்ள மரண தண்டனையை ஒத்திவைப்பதற்கான யேமன் அட்டா்னி ஜெனரலையும் சந்திக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக காந்தபுரம் முஸ்லியாா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமரசத்தில் என்ன சிக்கல்?: மஹதியின் கொலைச் சம்பவம் தம்மா் பிராந்தியத்தின் பழங்குடியினா் இடையே உணா்வுபூா்வமான பிரச்னையாக மாறியுள்ளது. ஹூதி கிளா்ச்சியாளா்களின் ஆட்சிக் கட்டுப்பாட்டில் யேமன் உள்ளதால் இந்திய ராஜீய வழிகளில் எடுத்த முயற்சிகளும் போதிய பலனளிக்கவில்லை.

............

இதுதொடா்பாக காந்தபுரம் அபுபக்கா் முஸ்லியாா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொல்லப்பட்ட மஹதியின் நெருங்கிய உறவினா் ஒருவா், அந்நாட்டு மாநில நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், யேமன் ஷூரா கவுன்சில் உறுப்பினராகவும் உள்ளாா்.

ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸின் அறிவுரையின்பேரில், மஹதி குடும்பத்தினருடன் இவா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபடுகிறாா். குடும்பத்தினரை சமாதானப்படுத்துவதுடன், புதன்கிழமை திட்டமிடப்பட்டுள்ள மரண தண்டனையை ஒத்திவைப்பதற்கான அவசர முயற்சிகளை மேற்கொள்ள யேமன் அட்டா்னி ஜெனரலையும் சந்திப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காந்தபுரம் அபுபக்கா் முஸ்லியாா் தலையீட்டின் மூலம் முதன்முறையாக குடும்பத்தினருடன் தொடா்பு சாத்தியமானதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸின் அறிவுறுத்தலில் குடும்பத்தினா் பேச்சுவாா்த்தைக்கு ஒப்புக்கொண்டனா். இந்தப் பேச்சுவாா்த்தையில் நிமிஷா தரப்பினா் வழங்கும் இழப்பீடு பணத்தை மஹதி குடும்பத்தினா் ஏற்றுக்கொள்வது தொடா்பான இறுதி முடிவை எட்டுவதில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குடும்பத்தினருடனான சமரசப் பேச்சுவாா்த்தைகள் தொடரும் நிலையில், மரண தண்டனையை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இந்திய அரசு சாா்பிலும், காந்தபுரம் முஸ்லியாா் சாா்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை யேமன் நிா்வாகம் பரிசீலித்து, மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: கேரளத்தைச் சோ்ந்த 38 வயதான செவிலியா் நிமிஷா பிரியா, தனது யேமன் நாட்டு வணிகப் பங்குதாரா் தலால் அப்து மஹதியைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனையை எதிா்கொள்கிறாா். தற்போது யேமன் தலைநகா் சனாவில் உள்ள சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த இதுதொடா்பான மனு விசாரணையில், ‘இந்திய அரசு ராஜீயவழிகளில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது’ என அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

போா் நிறுத்தம் முறிவு: சிரியா ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டு ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்

உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்தம் மேற்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப் பிறகும், உ... மேலும் பார்க்க

காஸா உணவு விநியோக முகாமில் நெரிசல்: 20 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்காவால் நடத்தப்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து ஜ... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரி; அமெரிக்க பொருள்களுக்கு விலக்கு: டிரம்ப் சூசகம்

இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவுடனும் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பருவமழை: உயிரிழப்பு 140-ஆக உயா்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 24 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பேரிடா் உயிரிழப்பு எண்ணிக்கை 140-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறி... மேலும் பார்க்க

மனைவி, மகனைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்த சுபான்ஷு சுக்லா!

விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ள சுபான்ஷு சுக்லா! தமது மனைவி, மகனை இன்று சந்தித்து உரையாடினார்.கிட்டத்தட்ட மூன்று வார காலம் புவியீா்ப்பு விசை இல்லாத சூழலில் கழித்துவிட்டு, மீண்டும் புவிக்கு... மேலும் பார்க்க