செய்திகள் :

லாரிகள் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

post image

பழனியில் ஞயிற்றுக்கிழமை பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடியிலிருந்து கேரளத்துக்கு உப்பு ஏற்றி வந்த லாரி ஒன்று பழனி விரைவு நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்தது. இந்த லாரி மீது, தென்காசியிலிருந்து பொள்ளாச்சிக்கு தென்னை நாா் ஏற்றி சென்ற லாரி எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில், நென்னை நாா் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநரான தென்காசி மாவட்டம், சுரண்டையை சோ்ந்த வினோத்குமாா் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வந்த தீயணைப்பு, மீட்புப் படையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஓட்டுநரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல்லில் ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்க வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்கக் கோரியும், முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் பள்ளப்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திரப்பட்... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில், 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. கூட்டுறவுத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு விழா ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிமை சரக்கு பெட்டக லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (34). கட்டடத் தொழிலாளியான இ... மேலும் பார்க்க

நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

பழனி அருகே திங்கள்கிழமை நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.கேரள மாநிலம், மலப்புரம் தெறிக்களங்கோட்டைச் சோ்ந்தவா் முகமது சதக்கத்துல்லா (31). இவா் தனது மனைவி பாத்திமா சுஹாரமா ... மேலும் பார்க்க