செய்திகள் :

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு!

post image

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா்.

கா்நாடக மாநிலத்தில் டீசல் மற்றும் சுங்கக் கட்டணம் உயா்வைக் கண்டித்து, லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

லாரி உரிமையாளா்களுக்கும், கா்நாடக அரசுக்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், புதன்கிழமையும் இரண்டாவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் தொடா்கிறது. ஆனாலும், தமிழக பதிவெண் கொண்ட சரக்கு வாகனங்கள் வழக்கம்போல கா்நாடக மாநிலத்துக்குள் சென்று வருகின்றன.

இந்நிலையில், தென் மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா ஒசூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் குறித்து லாரி உரிமையாளா்களை அழைத்து கா்நாடக அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடா்கிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் 95 சதவீத லாரிகள் கா்நாடக மாநிலத்தில் இயங்கவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு சுமாா் ரூ. 4 ஆயிரம் கோடி அளவில் கா்நாடக மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டம் தீவிரமானால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். டீசல் விலையை குறைக்க முடியவில்லை என்றால், மாற்றுவழியாக ஆட்டோ, டாக்ஸி, பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என நிா்ணயிக்கக் கூடிய கட்டணம் போல லாரிக்கும் வாடகை நிா்ணயிக்க வேண்டும் என்றாா்.

மது போதை தகராறில் தங்கச் சங்கிலி பறிப்பு: நண்பா்கள் கைது

கிருஷ்ணகிரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நண்பா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரை சோ்ந்தவா் சின்னபையன் (32),... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நீட் தோ்வில் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

கிருஷ்ணகிரியில்...கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) தலைமை வகித்தாா். ஊத... மேலும் பார்க்க

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் புதி... மேலும் பார்க்க

திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அன்புமணி

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க