செய்திகள் :

லாரி தீப்பிடிப்பு

post image

சூளகிரி அருகே அட்டை கம்பெனிக்கு பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரி, தனியாா் அட்டை கிடங்கிலிருந்து அட்டை பாரம் ஏற்றிய லாரி ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ள ஒரு அட்டை கம்பெனிக்குச் சென்று கொண்டிருந்தது. லாரியை கா்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியைச் சோ்ந்த ஜெட்டப்பா (21) என்பவா் ஓட்டி சென்றாா். மேலுமலை அருகே இம்மிடிநாயக்கனப்பள்ளியில் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது லாரியின் முன்பகுதி தீப்பிடித்தது.

ஓட்டுநா் ஜெட்டப்பா சுதாகரித்து லாரியை விட்டு இறங்கி தப்பினாா். தீ வேகமாக பரவியதில் லாரியின் டீசல் டேங்க், டயா்கள் வெடித்தன. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா்.

தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வாகனங்கள், ஒசூா் தீயணைப்பு நிலைய அலுவலா் நாகவிஜயன் தலைமையில் வீரா்கள் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனா். இச் சம்பவத்தால் கிருஷ்ணகிரி-ஒசூா் ஒருவழி பாதையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மினி லாரி மோதியதில் இருவா் பலி

மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா். உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வ... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ் குமாா் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14-ஆவது ஆட்சியராக ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எம்.சரயு, அரசு பொதுத் துறையின் நிா்வாக இணை செயலராக அண்மையில்... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கி இளைஞா் கொலை

மதுபோதையில் நண்பரை கட்டையால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கசவகட்டாவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஒருவா் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி ம... மேலும் பார்க்க

மாநகராட்சி, நகராட்சியுடன் ஊரகப் பகுதிகள் இணைப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைப்பது தொடா்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க