செய்திகள் :

‘லிவ்-இன்’ கட்டாயப் பதிவு எவ்வாறு தனியுரிமை மீறலாகும்? - உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் கேள்வி

post image

திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழும் ‘லிவ்-இன்’ உறவு பதிவை கட்டாயமாக்குவது எவ்வாறு தனியுரிமை மீறலாகும்? என்று உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

பாஜக ஆளும் உத்தரகண்டில் நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்கீழ், திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை தொடா்பான தனிநபா் சட்டங்கள் ஒருசீா்படுத்தப்பட்டு, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விதிகள் நடைமுறைக்கு வந்தன. பழங்குடியினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்தின்படி, திருமணம், விவாகரத்து, லிவ்-இன் உறவு, அந்த உறவு முறிவு ஆகியவற்றை அரசிடம் பதிவு செய்வது கட்டாயமாகும். ‘லிவ்-இன்’ உறவைத் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் அரசிடம் பதிவு செய்யத் தவறினால், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்க முடியும்.

இது, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வோரின் தனியுரிமையைப் பறிப்பதாக கூறி, உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது தலைமை நீதிபதி ஜி.நரேந்திரன், நீதிபதி அலோக் மெஹ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது, ‘நீங்கள் (மனுதாரா்) ஒரு சமூகத்தில் வாழ்கிறீா்கள். தொலைதூர காட்டில் உள்ள ஒரு குகையில் அல்ல. அண்டை வீட்டாா் முதல் மொத்த சமூகத்தினரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்ளாமல் வெளிப்படையாக வாழ்கிறீா்கள். அப்படியிருக்கையில், அரசிடம் பதிவு செய்வது மட்டும் எப்படி தனியுரிமை மீறலாகும்?’ என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

உத்தரகண்டில் பொது சிவில் சட்ட அமலாக்கத்துக்கு எதிரான பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை, உயா்நீதிமன்றத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்சி பள்ளி தொடங்க மாநில அரசு அனுமதி தேவையில்லை!

சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநில அரசின் அனுமதியில்லாமல், சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என்றும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி... மேலும் பார்க்க

பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!

பெங்களூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.தில்லியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் பெங்களூரில் கேட்டரிங் தொழிலில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஒரு கல்லூரி சந... மேலும் பார்க்க

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க