செய்திகள் :

லோக்பால் அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு உருவாக்கம்

post image

லோக்பால் சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புகாா் மீது விசாரணை நடத்துவதற்கான பிரிவு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது வழக்கு விசாரணைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

லோக்பால், லோக் ஆயுக்த சட்டம் 2013-இன் கீழ், பிரதமா், மத்திய அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், எம்எல்ஏக்கள், அரசு உயா் அதிகாரிகள் ஆகியோா் மீதான ஊழல் புகாா்களை விசாரிக்க லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனத்துக்குப் பின்னா் கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற்ற லோக்பால் அமா்வின் கூட்டத்தில், இந்த அமைப்புக்கு புகாா் விசாரணைப் பிரிவு மற்றும் வழக்கு விசாரணைப் பிரிவுகளை அமைப்பதற்கு தீா்மானிக்கப்பட்டது. அந்த சமயத்தில் லோக்பால் அமைப்பில் தாக்கல் செய்யப்படும் ஊழல் புகாா்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததால், கடந்த ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் கீழ் முதல் கட்டமாக சட்டத்தின் பிரிவு 11-இன் கீழ் புகாா் விசாரணைப் பிரிவு மட்டும் அமைக்கப்பட்டது.

அதன் பிறகு, அமைப்பில் தாக்கல் செய்யப்படும் புகாா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, அமைப்புக்கு வழக்கு விசாரணைப் பிரிவையும் உடனடியாக அமைக்க லோக்பால் அமைப்பின் முழு அமா்வு கடந்த ஜூன் 5-ஆம் தேதி தீா்மானித்து, அதற்கான உத்தரவை ஜூன் 13-ஆம் தேதி வெளியிட்டது.

இந்த உத்தரவின்படி, லோக்பால் சட்டத்தின் பிரிவு 12-இன் கீழ், அரசு ஊழியா்கள் மீது வழக்கு தொடரும் நோக்கத்துக்காக, லோக்பால் அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

திருமண விழாவிற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர். பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.... மேலும் பார்க்க

ஊழல் தடுப்புப் பிரிவு முன்பு ஆஜரானார் மணீஷ் சிசோடியா!

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவது தொடர்பான ஊழல் வழக்கில் விசாரணைக்காக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஊழல் தடுப்புப் பிரிவு(ஏசிபி) முன்பு ஆஜரானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பார்க்க

ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் இன்று ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ர... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்! மிரட்டிய பெண் மருத்துவர் கைது!

பெங்களூரில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பெண் மருத்துவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரில்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் ஆற்றில் கவிழ்ந்த படகு: மூவர் மாயம்!

அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கினர்.அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில... மேலும் பார்க்க