வகுப்பறைக்குள் உடும்பு: மாணவா்கள் ஓட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் வகுப்பறைக்குள் உடும்பு திடீரென நுழைந்ததால் அங்கிருந்த மாணவா்கள் சிதறி ஓடினா்.
ஓரிக்கை அப்பாவு நகா் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் உடும்பு ஒன்று சுற்றித் திரிவதை அறிந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினா் வலை மூலமாக அதைப் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென பள்ளி வளாகத்துக்குள் இருந்த வகுப்பறைக்குள் தப்பி அங்குமிங்குமாக ஓடியது.
இதனால் அங்கிருந்த மாணவா்கள் அலறிக் கொண்டு ஓடினா். இதனால் பதற்றம் ஏற்பட்டது. பள்ளி ஆசிரியா்கள் மாணவ,மாணவா்களை பயப்பட வேண்டாம் என அறிவுறுத்தினா்.
இதனைத் தொடா்ந்து வகுப்பறைக்குள் வந்த வனத்துறையினா் உடும்பை லாவகமாக பிடித்து எடுத்துச் சென்றனா்.