செய்திகள் :

புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி அறிமுகம்!

post image

இரு சக்கர வாகனத்தில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி மாடல் பைக் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆர்டிஆர் 200 4வி பைக்கின் 2025ஆம் ஆண்டு வெர்சனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

முந்தைய ஆர்டிஆர் 200 4வி மாடலைவிட சில அப்டேட்களுடன் வெளியாகியுள்ள இந்த மாடலின் ஷோ ரூம் விலை ரூ. 1.54 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

என்ஜினை பொறுத்தவரை முந்தைய மாடலில் இருந்த சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் தொடர்கிறது. ஓபிடி 2பி விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 199 சிசியில் சோதிக்கப்பட்டுள்ளது.

20.8 எச்.பி. பவர் மற்றும் 17.25 என்.எம். டார்க் தொடர்கிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் அம்சத்துடன் அர்பன், ஸ்போர்ட், ரெயின் ஆகிய மோட்களில் பைக்கை ஓட்டும் வசதி உள்ளது.

மேட் பிளாக், கிளாஸி பிளாக் மற்றும் கிரானைட் கிரே ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து நிற பைக்கின் சக்கரங்களும் சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோஃபார்ம் கைப்பிடி, ரேஸ் பைக்கை போன்று ஸ்லிப்பர் கிளட்ச், அட்ஜஸ் கிளட்ச், லீவர்கள், டிஜிட்டல் திரைகள், எல்இடி விளக்குகள், புளூடூத் இணைக்கும் வசதிகளும் உள்ளன.

இதையும் படிக்க : தங்கம் விலை இன்றும் குறைவு! எவ்வளவு?

பங்குச்சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிவு!

மும்பை: செவ்வாய்கிழமையும் பங்குச்சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிவடைந்துள்ளது.மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் காலையில் 96 புள்ளிகள்(0.12%) குறைவுடன் 82,349-இல் தொடங்கி வா்த்தக இறுதியில் 53.5 புள்... மேலும் பார்க்க

தங்கம் விலை இன்றும் குறைவு! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் குறைந்துள்ளது.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 73,040-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ச... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து 85.64 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.85.64 ஆக நிறைவடைந்தது. இதற்கு உள்நாட்டு பங்குச் சந்தைகளில் உறுதியான போக்கு மற்றும் அந்நிய நிதி வரத்து... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கி குறியீடு 2% உயர்வு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் வெகுவாக உயர்ந்து முடிந்தன. நிஃப்டி-யில் பொதுத்துறை வங்கி குறியீடு 1.5 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்து 7,210 புள்ளிகளாக நிலைபெற்றது. ஜூன் 6 அன்... மேலும் பார்க்க

பங்குச் சந்தைகள் 4வது நாளாக உயர்ந்து முடிவு!

மும்பை: உலக சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் ரிசர்வ் வங்கியின் 50 அடிப்படை புள்ளிகள் வீதக் குறைப்புக்குப் பிறகு முதலீட்டாளர்களின் உற்சாகமான மனநிலையைத் தொடர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் கு... மேலும் பார்க்க

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்!

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று(ஜூன் 9) காலையில் 480.01 புள்ளிகள் உயர்ந்து 82,669-இல் தொடங்கி வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 157.05 புள்ளிகள் உயர்ந்து 25,160.10-இல் வர... மேலும் பார்க்க