ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!
பங்குச்சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிவு!
மும்பை: செவ்வாய்கிழமையும் பங்குச்சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் காலையில் 96 புள்ளிகள்(0.12%) குறைவுடன் 82,349-இல் தொடங்கி வா்த்தக இறுதியில் 53.5 புள்ளிகள்(0.06%) குறைந்து 82,391.72-இல் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வா்த்தக இறுதியில் 1.05 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 25,104.25-இல் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் இறக்கத்தைச் சந்தித்துள்ளன - மாருதி சுசுகி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக், இண்டஸ்இண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.