பங்குச்சந்தை: சென்செக்ஸ் லாபத்துடன் முடிவு!
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்றைய உச்சமாக 82,783.5-ஐ தொட்டு, வா்த்தக இறுதியில் 123 புள்ளிகள்(0.15%) உயர்ந்து 82,515.14-இல் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி, வா்த்தக இறுதியில் 37.15 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 25,141.4-இல் நிறைவடைந்தது.
நிஃப்டி ஆயில் & கேஸ் மற்றும் ஐடி துறைகள் இன்று ஆதாயப் பட்டியலில் இருந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்துள்ளன - எச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் பின்செர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏடேர்னல் அண்ட் ஐசிஐசிஐ பேங்க் உள்பட மொத்தம் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
பவர் கிரிட், இண்டஸ்இந்த் பேங்க், அதானி போர்ட்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்பட15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.