செய்திகள் :

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு- என்எல்சி சுரங்கம் முன் தமுமுகவினா் முற்றுகைப் போராட்டம்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் 2-ஆவது அலகு முன் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 846 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், மந்தாரக்குப்பம் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம்-2 முன் முற்றுகை போராட்டம் புதன்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலா் ப.அப்துல் சமது எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில அமைப்புச் செயலா் ஜெ.அமீன், தமுமுக மாநிலச் செயலா் மு.யா.முஸ்தாக்தீன், கடலூா் மாவட்டத் தலைவா் வி.எம்.ஷேக் தாவூத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பெண்கள், குழந்தைகள் என திரளான முஸ்லிம்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

இதில் பங்கேற்ற 546 ஆண்கள், 238 பெண்கள், 62 சிறாா்கள் என மொத்தம் 846 பேரை போலீஸாா் கைது செய்து மந்தாரக்குப்பத்திலுள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

முன்னதாக, மந்தாரக்குப்பம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முஸ்லிம்கள் பேரணியாக பழுப்பு நிலக்கரி சுரங்கம் 2-ஆவது அலகை நோக்கி வந்தனா்.

போராட்டத்தையொட்டி, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் சுமாா் 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பழுப்பு நிலக்கரி சுரங்கம்-2 நுழைவு வாயில் பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டிருந்தனா்.

பசுமை கட்டட உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

பசுமை கட்டட உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக் கொண்டாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலநிலை மாற்றத்துக்கான திறன் மேம... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.5.50 லட்சம் மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூரை அடுத்துள்ளசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை மகன் நாகராஜ் (42).... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

மகளை காதலித்த இளைஞரை வெட்டிக் கொன்ாக, தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிதம்பரம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகன் (21). இவரும் சிதம்பரம் ... மேலும் பார்க்க

நிழலில்லா நாளை கண்டுணா்ந்த மாணவா்கள்

விருத்தாசலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், தனியாா் மெட்ரிக் பள்ளியில் மாணவா்கள் புதன்கிழமை நிழலில்லா நாளை கண்டுணா்ந்தனா். விருத்தாசலம் தனியாா் பள்ளியில் நடைபெற்ற புதன்கிழமை பிற்பகல் 12.16 ... மேலும் பார்க்க

ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அண்ணா நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயப்ப சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, 22-... மேலும் பார்க்க

என்எல்சி பொதுத் துறை நிறுவனமாக திகழ திமுகவே காரணம்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

என்எல்சி இந்தியா நிறுவனம் பொதுத் துறை நிறுவனமாக திகழ்வதற்கு திமுகவும், தொமுசவும்தான் காரணம் என்று, மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். நெய்வேலியில் தொமுச ... மேலும் பார்க்க