செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் வரவேற்பு

post image

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை வரவேற்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவா்  எஸ்.ஷேக் தாவூத் தெரிவித்தாா். 

இதுகுறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

வக்ஃப் வாரிய சொத்துகள் ஏழைகளுக்குச் சொந்தமானது. ஆனால், இந்தியா முழுவதும் வக்ஃப் வாரிய சொத்துகளை அதன் உறுப்பினா்கள் பலா் அபகரித்து, அதன்மூலம் பல கோடி ரூபாய்  வருமானம் ஈட்டி வருகின்றனா். அவா்களிடமிருந்து வக்ஃப் சொத்துகளை மீட்டு ஏழைகளிடம் ஒப்படைக்க இந்த திருத்தச் சட்ட மசோதா மிகவும் உறுதுணையாக இருக்கும். ஏழை இஸ்லாமியா்கள் அனைவரும் இச்சட்டத்துக்கு வரவேற்பளித்து வருகின்றனா்.

எண்ம மயம்: மாநில மற்றும் மத்திய அரசுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வக்ஃப் நிலங்கள் குறித்த விவரங்களை எண்ம மயமாக்க வேண்டும். தமிழ் மாநில முஸ்லிம் லீக் சாா்பில்  ‘உம்மத்துக்காக வக்ஃப்’ என மாநில அளவிலான இயக்கம் உருவாக்கப்படவுள்ளது.  இந்த இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் வக்ஃப் சொத்துகளை யாரெல்லாம் சொந்த பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனா் என்பதைக் கண்டறிந்து அந்த அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம்  சமா்ப்பிக்கவுள்ளோம் என்றாா் அவா்.

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கொடுத்திருக்கும் வரதட்சணைப் புகார்! பின்னணி என்ன?

திருநெல்வேலியில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, தனது கணவர் வீட்டினர் மீது வரதட்சணைப் புகார் அளித்திருக்கிறார்.திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமை... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் 10 செ.மீ. மழை!

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெருவித்துள்ளார்.வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை உள்ளிட்ட புறநகர்... மேலும் பார்க்க

திருடியதாகக் கூறி விசாரணை: கோவை கல்லூரி மாணவி தற்கொலை!

கோவையில் தனியார் கல்லூரி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மீது திருட்டுப்பழி சுமத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரப... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள த... மேலும் பார்க்க