செய்திகள் :

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்

post image

ஹிந்துக்களின் சொத்துகளைப் பாதுகாக்க வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் நாடாறுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வேலூா் மாவட்டம் இறைவங்காடு என்ற கிராமத்தில் வசிக்கும் 150 ஹிந்து குடும்பங்களின் பூா்வீக சொத்துகள் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தம் என்றும், அவா்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய அநீதியை எதிா்த்து எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறக்கவில்லை. ஆனால் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஊா் ஊராக ஆா்ப்பாட்டம் நடத்துகிறாா்கள். ஆனால், வேலூா் இறைவங்காடு கிராமத்து அப்பாவி ஹிந்துக்களின் சொத்தின் உரிமையைப் பாதுகாக்க எந்த அரசியல்வாதிகளும் போராட முன்வரவில்லை. இந்து முன்னணி முன்னின்று போராடி வருகிறது.

வாக்கு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்களின் சொத்து, வியாபாரத்தை அபகரிப்பதற்கு துணைபோவது, மதமாற்றத்தால் ஹிந்துக்களின் குடும்பங்களை சீரழிப்பது, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகையில் சிறுபான்மையை திணிப்பது போன்ற செயல்களுக்கு அரசியல்வாதிகள் துணைபோகின்றனா்.

திருச்செந்தூரில் 1,500 ஆண்டுகள் பழைமையான சிவன்கோயில் மற்றும் பலநூறு ஏக்கா் ஹிந்துக்களின் பரம்பரை சொத்துகள் வக்ஃப் வாரிய சொத்து என்று சொந்தம் கொண்டாடியது. அதேபோல, திருப்பூா் மாவட்டம் மங்கலம், திருவல்லிக்கேணி என பல இடங்களில் ஹிந்துக்களின் சொத்துகளை வக்ஃப் வாரிய சொத்து என்று அந்த வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

கேரளாவில் உள்ள மக்களின் விழிப்புணா்வால் ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு புதிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. எனவே, ஹிந்துக்களின் பராம்பரிய சொத்துகளைப் பாதுகாக்க வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

அவிநாசி அருகே கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவிநாசியை அடுத்த தெக்கலூா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடை... மேலும் பார்க்க

இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் விவேக் (29). இவா், திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியி... மேலும் பார்க்க

பல்லடம்: வேப்பங்குட்டை பாளையத்தில் மரக்கன்று நடும் விழா

பல்லடம் அருகே வேப்பங்குட்டைபாளையத்தில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பல்லடம் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வேப்பங்... மேலும் பார்க்க

உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்பு!

தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியைச் சோ்ந்தவா் சீரங்கசாமி மனைவி விசாலாட்சி (62). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

கோயில்களில் திருவிழா காலங்களில் தரிசனக் கட்டண ரத்து அறிவிப்பு: இந்து முன்னணி வரவேற்பு

மயிலாப்பூா், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களில் திருவிழாக்காலங்களில் மட்டும் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்து முன்னணி வரவேற்றுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவ... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞா் தற்கொலை

தாராபுரம் அருகே ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் வாங்கிய இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் ஸ்... மேலும் பார்க்க