செய்திகள் :

வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு: எதிா்க்கட்சிகள் வரவேற்பு

post image

வக்ஃப் திருத்தச்சட்ட விவகாரத்தின் அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை வரை வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக்கூடாது என மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதற்கு காங்கிரஸ், கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.

காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கும் என யாரும் எதிா்பாா்க்கவில்லை. அதே நேரம், இந்த உத்தரவு மூலமாக, வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய ஆட்சேபங்கள் சரியானதுதான் என்ற மிகப்பெரிய செய்தியை நாட்டு மக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இந்த திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை தத்துவத்தையே மீறுவதாக உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேரள மாநில செயலா் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் தலையீடு நாட்டின் மதச்சாா்பற்ற குழுக்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்திருக்கிறது. வக்ஃப் சட்டத்தை திருத்த மத்திய அரசு மேற்கொண்ட தன்னிச்சையான முடிவுக்கு எதிரான வலுவான பதிலடியாக உச்சநீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது’ என்றாா்.

ஐயுஎம்எல் பொதுச் செயலா் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி கூறுகையில், ‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் நடைமுறையை நிறுத்தி வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு, பாரபட்சமற்ற முறையில் இந்த விவகாரம் விசாரிக்கப்படுவதைக் காட்டுகிறது. ஆனால், இது வழக்கு விசாரணையின் வழக்கமான நடைமுறை. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எத்தகைய இறுதி முடிவை எடுக்கப்போகிறது என்பதுதான் முக்கியம்’ என்றாா்.

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க