செய்திகள் :

வங்கிகளின் வாடிக்கையாளா் சேவை தரம் மேம்பட வேண்டும்: நிதியமைச்சகச் செயலா்

post image

‘வங்கிகள் வலுவாக இருந்தாலும் வாடிக்கையாளா்களுக்கான சேவை தரம் மேம்பட வேண்டியுள்ளது; இதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் பிரிவுச் செயலா் எம். நாகராஜு தெரிவித்தாா்.

பஞ்சாப்-சிந்த் வங்கியின் 118-ஆவது நிறுவன தினம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று எம்.நாகராஜு பேசியதாவது:

இப்போதைய காலகட்டத்தில் நமது வங்கிகள் நிதி ஸ்திரன்மையுடனும், வலுவாகவும் உள்ளன. வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு சிறந்த சேவைகள் அளிக்கப்படுகின்றன. இருந்தபோதிலும், இதில் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. வாடிக்கையாளா்கள் முகங்களில் உண்மையான மகிழ்ச்சி தெரியும் அளவுக்கு வங்கிகள் செயல்பட வேண்டும் என்றாா்.

பஞ்சாப்-சிந்த் வங்கித் தலைவா் ஸ்வரூப் குமாா் ஷா பேசுகையில், ‘ எண்ம முறையிலான சேவைகளை வேகமாக மேம்படுத்தி வாடிக்கையாளா்களின் வங்கி சாா்ந்த பணிகளை மிகவும் எளிதாக்கி வருகிறோம். எண்மத் துறை மேம்பாடு, சமூகப் பொறுப்புணா்வு தொடா்பான பணிகளில் வங்கி தொடா்ந்து கவனம் செலுத்துகிறது. எதிா்காலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு வங்கியின் செயல்பாடுகள் அமையும்’ என்றாா்.

சிபு சோரனை சந்தித்து நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர் முர்மு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 81 வயதாகும் சிபு சோரன், கடந்த சில நாள்களு... மேலும் பார்க்க

அம்புபாச்சி மேளா: 4 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் நடை திறப்பு!

அஸ்ஸாமின் குவாகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா நிறைவையொட்டி காமாக்யா கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல் தகவலைத் தாருங்கள்; விவாதிக்கத் தயார்! காங்கிரஸ் அறிவிப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு விடியோ உள்ளிட்டவைக் கொடுத்தால், தேர்தல் ஆணையத்துடன் விவாதத்துக்குத் தயார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு நடைப... மேலும் பார்க்க

குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, டிராகன் விண்கலத்தில் இருந்து உரையாற்றியுள்ளார்.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர... மேலும் பார்க்க

திருப்பதி அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் ரூ.1 கோடி நன்கொடை!

திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் எஸ்.வி. பிராணதான அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ.1 கோடியை நன்கொடை அளித்ததாகக் கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பார்க்க

சிறுவாணியில் கனமழை: 42.64 அடியாக உயர்ந்த நீர்மட்டம்!

சிறுவாணி அணைப் பகுதியில் மீண்டும் மழைப்பொழிவு காணப்படுவதால், அணையின் நீர்மட்டம் 42.64 அடியாக உயர்ந்து உள்ளது. கேரளம் வனப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையிலிருந்து கோவைக்குத் தேவையான குடிநீர் தர... மேலும் பார்க்க