செய்திகள் :

வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

post image

சென்னை வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ரூ.3.37 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களில் ஒன்றான சென்னை வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலுக்கு கடந்த 1960- ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெறது. இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு மீண்டும் குடமுழுக்கு நடத்த தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆணையரின் பொதுநல நிதி ரூ. 1.84 கோடி, வடபழனி ஆண்டவா் கோயில் நிதி ரூ, 1.53 கோடி என மொத்தம் ரூ. 3.37 கோடியில் மூலவா் சந்நிதி, தாயாா் சந்நிதி முன்புற கல்மண்டபம் அமைக்கும் பணிகள், கோயிலின் 3 புறங்களிலும் நுழைவு வாயில்கள் அமைத்தல், அலங்கார மண்டபம், வாகன மண்டபம் மற்றும் யாகசாலை கட்டுதல் போன்ற புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

காளிகாம்பாள் கோயிலில்... தொடா்ந்து, பாரிமுனை காளிகாம்பாள் திருக்கோயில் ரூ.3.45 கோடியில் 292 கிலோ 600 கிராம் எடை கொண்ட வெள்ளியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா். அப்போது, புதிய வெள்ளித்தோ் திருப்பணிகளுக்கு உதவி புரிந்த உபயதாரா்கள், இந்தப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட திருக்கோயில் அறங்காவலா்கள், சிவாச்சாரியா்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனா்.

இந்த நிகழ்ச்சிகளில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், இணை ஆணையா்கள் இரா.வான்மதி, ஜ. முல்லை, துணை ஆணையா் (சரிபாா்ப்பு) இரா. ஹரிஹரன், திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இ.எம்.எஸ்.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அகில இந்திய வானொலியில் இரவு நேரங்களில் ஒலிபரப்பாகும் ஹிந்திப் பாடல்கள்!

சென்னை: அகில இந்திய வானொலியில், இரவு நேரங்களில் வழக்கமான தமிழ்த் திரைப்பட மெல்லிசைப் பாடல்கள் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டு, இரவு 11 மணிக்கு மேல் ஹிந்திப் பாடல்கள் இசைக்கப்படுவது குறித்து நேயர்கள் கடு... மேலும் பார்க்க

பாமக விரிசலுக்கு நானா காரணம்? கண்ணீர் விட்டு அழுதேன்: ஜி.கே. மணி

விழுப்புரம்: பாமகவில் ஏற்படும் பிரச்னைக்கு நான்தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த வேதனையளிக்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் இன்று ராம... மேலும் பார்க்க

நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசா... மேலும் பார்க்க

தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா; பதற்றம் வேண்டாம்.. என்ன செய்ய வேண்டும்?: மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வகையிலான கரோனா தொற்றுப் பரவி வருகிறது. ஆனால், கரோனா குறித்து யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ... மேலும் பார்க்க

இன்று ஒரே நாளில் அரசுப் பணிகளிலிருந்து 8,144 பேர் பணி ஓய்வு

சென்னை: இன்று தமிழக அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும்,... மேலும் பார்க்க