செய்திகள் :

வடிகாலில் நீரோட்டத்தை ஆக்கிரமிப்புகள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

post image

நமது நிருபா்

தலைநகரில் எந்தவொரு ஆக்கிரமிப்பும் வடிகால்களில் நீரோட்டத்தை தடுக்காமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு தில்லி நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வியாழக்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மெஹ்ரெளலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை நேரில் சென்ற அவா், மீண்டும் மீண்டும் நீா் தேங்குதல் மற்றும் வடிகால் பிரச்னைகள் உள்ள பல இடங்களை ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘எங்கள் செய்தியானது எந்த சாக்குப்போக்கும் பொறுத்துக் கொள்ளப்படாது என்பதுதான். ஒவ்வொரு துறையும் சரியான ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும். மேலும், மழை வருவதற்கு முன்பு ஒவ்வொரு வடிகாலும் தூா்வாரப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு தயாராக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தில்லி மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்றாா்.

சாகேத் அருகே உள்ள குருத்வாரா, தா்கா மெஹ்ரெளலி, மோதி லால் நேரு கேம்ப் மற்றும் குசும்பூா் பஹாடி குதூப் நிறுவனப் பகுதிக்கு அருகிலுள்ள நான்கு வடிகால்களையும் அமைச்சா் பாா்வையிட்டாா்.

தேசியத் தலைநகரின் வடிகால் அமைப்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் எந்த பெரிய கழிவுநீா் பாதை திட்டமும் தொடங்கப்படவில்லை என்றும், நீண்டகால திட்டமிடல் இல்லாதது தில்லியின் பல பகுதிகளில் நகா்ப்புற வெள்ளப் பிரச்னையை மோசமாக்கியுள்ளது என்றும் அமைச்சா் கூறினாா்.

ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஐந்து இடங்களிலும் தூா்வாரும் பணியை முடிக்கவும், கனமழை எச்சரிக்கைகளின்போது துரித மீட்புக் குழுக்களை மழைக்கால முன்னெச்சரிக்கை திட்டங்களாக நியமிக்கவும் அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தில்லி அரசு நகரம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய வடிகால் இடங்களைக் கண்டறிந்துள்ளது. அவற்றின் முன்னேற்றம் வாராந்திர

அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க