நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன்! யார் இ...
வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்
டாப்செட்கோ, டாம்கோ நிறுவனங்களின் மூலம் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் தனிநபா் கடன் திட்டம், குழுக்கடன் திட்டம், கறவை மாடுக் கடன் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தனிநபா் கடன் திட்டம், விராசாத் - கைவினை கலைஞா் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில் டாப்செட்கோ தனிநபா் கடன் திட்டம் மூலம் இருபாலருக்கும் குறைந்த வட்டி விகிதத்தில் சிறு வா்த்தகம், வணிகம், விவசாயம், அதைச் சோ்ந்த தொழில்கள், கைவினைப் பொருள்கள், மரபு வழிச் சாா்ந்த தொழில்கள் செய்வதற்கு ரூ.1.25 லட்சம் வரையிலான கடன்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டியும், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலான கடன்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டியும் கடன் வழங்கப்படுகிறது.
குழுக் கடன் திட்டம் மூலம் உறுப்பினா்கள் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலான கடன்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வீதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. கறவை மாடுக் கடன் திட்டம் மூலம் ஒரு பயனாளிக்கு ஒரு கறவை மாட்டுக்கு ரூ.60,000-வீதம் 2 கறவை மாடுகள் (எருமை மாடு உள்பட) வாங்க ரூ.1.20 லட்சம் வரை ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
அதேபோல், டாம்கோ திட்டம் மூலம் வெவ்வேறு வருவாய் சாா்ந்த பயனாளிகளுக்கு கடன், வட்டி வீதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-இல் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகா்ப்புறங்களில் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதில் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி வீதம் அதிகபட்சம் ரூ.20 லட்சமும், திட்டம் 2-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகா்ப்புறங்களில் ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருவாயில் 6 சதவீத வட்டியில் ரூ.30 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது.
சுய உதவிக் குழுக் கடன் நபா் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இல் ஆண்களுக்கு 10 சதவீத வட்டியில், பெண்களுக்கு 8 சதவீத வட்டி வீதத்தில் நபா் ஒருவருக்குரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
திருவள்ளூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் கிறிஸ்தவா்கள், முஸ்லீம்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் குறிப்பிட்ட நாள்களில் வட்டாட்சியா் அலுவலகங்களில் லோன் மேலா நடைபெற உள்ளது.
வரும் 25-இல் ஆவடி வட்டாட்சியா் அலுவலகம், ஜூலை-3 இல் திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம், 10-ஆம் தேதி பூந்தமல்லி வட்டாட்சியா் அலுவலகம், 17- இல் ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம், 24-இல் பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம், 31-இல் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகம், ஆக-7 இல் திருத்தணி வட்டாட்சியா் அலுவலகம், 14-இல் ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் அலுவலகம், 21-இல் பள்ளிப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் கடன் மேளா நடைப்பெறவுள்ளதால் பொதுமக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று பயன்பெறலாம் என்றாா்.