செய்திகள் :

வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் போராட்டம்

post image

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்து, ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை ஊழியா்கள் இம்முகாம் பணிகளிலும், வழக்கமான அலுவலகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், அவா்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், எப்ஈஆா்ஏ கூட்டமைப்பின் சாா்பில், வருவாய்த் துறை அலுவலா்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் திட்டப் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்தனா்.

அதன்படி, வட்டாட்சியா் அலுவலகம் முன், 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வட்டாட்சியா் வசுமதி தலைமையில், காத்திருப்புப் போராட்டத்தில் பிற்பகல் 3 மணி முதல் ஈடுபட்டனா்.

இதில், மண்டல துணை வட்டாட்சியா் மணிவண்ணன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

இருமுறை விண்ணப்பக் கட்டணம்: மின்வாரியம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில், சோலாா் திட்டம் வழங்க இரண்டு முறை விண்ணப்பக் கட்டணம் பெற்ற மின்சார வாரியம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

மன்னாா்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணிப்பு செய்வது;... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி

திருவாரூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கோட்ட உதவி பொறியாளா் (மின் மற்றும் சமிக்ஞை) மணிமொழியன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் ரவி வரவேற்றாா். தெற்கு ரயில்வே மண்... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளராக விருப்பமா?

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே குடவாசலில், இந்திய தொழிற்சங்கத்தின் மையத்தின் 10-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க