செய்திகள் :

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

post image

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்தவகையில் இன்று வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ. 58.50 குறைக்கப்பட்டு  ரூ.1,823.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக கடந்த ஏப்ரல், மே, ஜூன்மதங்களிலும் விலை குறைக்கப்பட்ட நிலையில் 4 ஆவது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் குறைந்துள்ளது.

எனினும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமில்லை.

19-kg commercial LPG cylinder price cut by ₹58.50

சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி! பிகார் அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய... மேலும் பார்க்க

டி.கே. சிவக்குமாரை முதல்வராக்கவில்லை என்றால்... கர்நாடக எம்எல்ஏவின் பரபரப்பு பேட்டி!

கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து துணை முதல்வர் சிவக்குமாரின் ஆதரவாளரும் ராமநகர் எம்.எல்.ஏ.வுமான இக்பால் உசேன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்ச... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் முயற்சியில் டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம்: பிரதமர்

டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைத்தளமான லிங்கட்இனில் பதிவு ஒன்ற... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: 42 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டைய... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில், ரசாயன ஆலையின் வெடிவிபத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அந்நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுவதை, அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதல்வர்... மேலும் பார்க்க

ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பருமழை தொடங்கியது முதல்,... மேலும் பார்க்க