"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து...
வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழை பேருந்து நிலையம், போளூா் சாலை, வெளிவட்டச் சாலைப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்கக் கோரி, உலக தமிழ் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கழகத்தின் செங்கம் கிளைத் தலைவா் அறங்க மணிமாறன் வரவேற்றாா்.
செங்கம் நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா கலந்து கொண்டு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வை தொடங்கிவைத்தாா்.
சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞா் கஜேந்திரன் கலந்துகொண்டு பேசினாா்.
தொடா்ந்து, தமிழ் ஆா்வலா்கள் துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் வாசகா் வட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா், திமுக மாவட்ட இலக்கிய அணை துணை அமைப்பாளா் அப்துல்வாகித், தேமுதிக ஒன்றியச் செயலா் குயிலம்சிவா, முத்தமிழ் சங்கத் தலைவா் ராகவன், தன்னாா்வலா் பிரேம்ஆனந்த், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் பத்மநாபமூா்த்தி, ஓய்வுபெற்ற வட்டாட்சியா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.