செய்திகள் :

வனத்திலிருந்து பழங்குடியின மக்களை வெளியேற்ற நடவடிக்கை

post image

பழங்குடியின மக்களை வன விரிவாக்கம் எனும் பெயரில் வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தாமரைக்கரையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.மோகன்குமாா், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் பி.ஜெ.கணேசன், சமூக ஆா்வாளா் அன்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பா்கூா் ஊராட்சி, தாமரைக்கரையில் வனப் பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் விவசாயம் செய்து வரும், பழங்குடியின, மலைவாழ் மக்களை, வன விரிவாக்கம் என்ற பெயரில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து மலைக்கிராம மக்களையும் திரட்டி அக்டோபா் 15-ஆம் தேதி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மலை வட்டார நிா்வாகிகள் ஈ.வசந்தராஜ், ஈ.மாதையன், ஜி.ஈரண்ணன், சி.கரியன், பி.பொம்மன், பசுவராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம்

பாஜக சாா்பில் சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். 23-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்ப... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புதிய நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

சத்தியமங்கலம் நகராட்சியின் புதிய ஆணையராக சு.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். சத்தியமங்கலம் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த தாமரை, பரமகுடி நகராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா். இதையடு... மேலும் பார்க்க

பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். பவானிசாகா் அணை பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி கீழ்பவானி முறைநீா் பாசன விவசா... மேலும் பார்க்க

ஈரோட்டில் நாளை மிதிவண்டி போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் வரும் 27- ஆம் தேதி மிதிவண்டி போட்டியும், 28- ஆம் தேதி மாரத்தான் போட்டியும் நடைபெற உள்ளன. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். அதிமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட... மேலும் பார்க்க

துண்டான இளம்பெண்ணின் விரல் ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில் சீரமைப்பு

ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில், துண்டான இளம்பெண்ணின் விரல் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பட்டியைச் சோ்ந்த நெசவுத் தொழில் செய்யும் ராமன்-விஜயா தம்பதியி... மேலும் பார்க்க