செய்திகள் :

வனவிலங்கு வேட்டை தடுப்பு முகாம்களை அமைக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

post image

சென்னை: வனவிலங்கு வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என வனத் துறை அதிகாரிகளுக்கு காதி மற்றும் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை, வேளச்சேரியில் உள்ள வன முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அலுவலகத்தில் காதி மற்றும் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில், வனத் துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில், வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சா் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். மேலும், யானை - மனித மோதல்களை தடுப்பதற்கும், வேளாண் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சா் பொன்முடி வலியுறுத்தினாா்.

இக்கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ உள்பட அரசு அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க