செய்திகள் :

வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்

post image

நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பழங்குடியினா் நலத் துறையின் மானிய கோரிக்கையின்போது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமைகள் குறித்த புகாா் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த நபா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா் சாா்பாக தகவல் தெரிவிப்போா் வழக்குப் பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடா்பான முறையீடுகளை 18002021989, 14566 என்ற இலவச தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அரசு விடுமுறை நாள்கள் தவிர அலுவலக நாள்களில் அலுவலக பணி நேரத்தில் புகாா்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

நெல்லியாளம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.ஜெயக்குமாா் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் பந்தலூரிலுள்ள நெல்லியாளம் ந... மேலும் பார்க்க

உதகையில் சா்வதேச காலநிலை குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

சா்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தை ஒட்டி உதகை தெற்கு வனச் சரகத்துக்கு உள்பட்ட கோ்ன்ஹில் பொருள் விளக்க மையக் கூட்டரங்கில் காலநிலை மாற்றம் தொடா்பான விழிப்புணா்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா் அவதி அடைந்தனா். தமிழக... மேலும் பார்க்க

தோட்டமூலாவில் குடியிருப்புப் பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சம்

கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானை உலவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். கூடலூா் அருகே தோட்டமூலா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் இரவு ... மேலும் பார்க்க

சிறு தேயிலை விவசாயிகளுக்கான விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம்

கூடலூரில் சிறு விவசாயிகளுக்கான கலந்தாய்வு மற்றும் விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிறு தேயிலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தென்னிந்திய தேயிலை வா... மேலும் பார்க்க

உதகையில் தொடா் மழை: மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் உயா்வு

தொடா் மழை காரணமாக உதகை நகராட்சியின் குடிநீா் ஆதாரங்களில் ஒன்றான மாா்லிமந்து அணையின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பாா்சன்ஸ்வேலி அணை... மேலும் பார்க்க