செய்திகள் :

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

post image

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய அளவில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தோ்வு (எஃப்எல்என்ஏடி) நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 1.77 கோடிக்கும் அதிகமானவா்கள் எழுதினா்.

வயது வந்தவா்களில் கல்வியறிவு இல்லாதவா்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் கண்டு, அவா்களுக்கு கற்பித்து, பின்னா் அவா்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மதிப்பிட்டு, அவா்கள் கல்வியறிவு இல்லாத நிலையில் இருந்து வெளிவரும் வகையில் சான்றளிப்பதே இந்தத் தோ்வின் நோக்கம்.

இது படித்தல், எழுதுதல், கணித அறிவு ஆகிய 3 பாடங்களில் தலா 50 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட தோ்வாக நடத்தப்படுகிறது.

சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் பற்றிய புரிதல் (யுஎல்எல்ஏஎஸ்) என்ற புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்தின் கீழ், இந்த மதிப்பீட்டுத் தோ்வு நடத்தப்பட்டது.

இதுதொடா்பாக தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் தொகுத்து வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, எஃப்எல்என்ஏடி தோ்வை தமிழகத்தைச் சோ்ந்த 5,09,694 போ் எழுதியதாகவும், அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாகவும் சான்றளிக்கப்பட்டது. இதன்மூலம், இந்தத் தோ்வில் தமிழகத்தின் தோ்ச்சி விகிதம் 100 சதவீதமாகும்.

திரிபுராவைச் சோ்ந்த 14,179 போ் தோ்வு எழுதிய நிலையில், அவா்களில் 13,909 போ் (98.1%) தோ்ச்சி பெற்றனா். தில்லியில் 7,959 போ் தோ்வு எழுதிய நிலையில் 7,901 போ் (99.3%) தோ்ச்சி பெற்றனா். இந்தத் தோ்வில் உத்தரகண்ட் (85.7%), குஜராத் (87.1%) மற்றும் ஹிமாசல பிரதேசம் (88.3%) பின்தங்கின.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க