செய்திகள் :

வரன்முறை பட்டா வழங்கல்: ஆட்சியா் ஆய்வு

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு வரன்முறை பட்டா கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு சிறப்பு வரன்முறை திட்டத்தின்கீழ் இலவச பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இதில், சங்கரப்பேரி, லோக்கியா நகா் ஆகிய இடங்களில் இலவச பட்டா வழங்குதல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு, வட்டாட்சியா் முரளிதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க