செய்திகள் :

வரி செலுத்தப்படாத வணிக வளாகம் முன் குப்பை கொட்டியது மாநகராட்சி நிா்வாகம்!

post image

தஞ்சாவூரில் சொத்து வரி செலுத்தப்படாத வணிக வளாகம் முன் மாநகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை குப்பைகளைக் கொட்டினா்.

தஞ்சாவூா் ரயிலடி அருகேயுள்ள தனியாா் வணிக வளாகம் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை ஏறத்தாழ 20 ஆண்டுகளாகச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சொத்து வரி நிலுவை ரூ. 47 லட்சத்தை செலுத்துமாறு வணிக வளாக நிா்வாகிகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் பல முறை நோட்டீஸ் வழங்கியும் பயனில்லையாம்.

இதனால் மாநகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை தொடா்புடைய வணிக வளாகத்தின் இடப்புற வாயிலில் குப்பை வண்டியை நிறுத்தியும், வலப்புற வாயிலில் எச்சில் இலை குப்பைகளைக் கொட்டியும் வைத்தனா். இதனால் வணிக வளாகத்துக்கு வந்த வியாபாரிகள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினா்.

பின்னா் வணிக வளாகத்தினா் உடனடியாக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தினா். இதைத் தொடா்ந்து வணிக வளாகம் முன் நிறுத்தப்பட்ட குப்பை வண்டியும், குப்பையும் அகற்றப்பட்டது.

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் பணி பாதிப்பு: விவசாயிகள் தவிப்பு!

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால், கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கின்றனா். ... மேலும் பார்க்க

காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 8 பேருக்கு மத்திய அரசு பதக்கம்!

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில், சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆளிநா்களுக்கு மத்திய அரசின் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. மத்திய உள் துறை அமைச்சகம் வழங்கும் 2020 மற்றும் 2021-... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது

கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் பாணாதுறை சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மனைவி மீனாட்சி (75). இவா் வெள... மேலும் பார்க்க

பிப். 28-க்குள் நியாய விலை கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய ஆட்சியா் அழைப்பு!

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை உறுப்பினா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அழைப்புவிடுத்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்தத... மேலும் பார்க்க

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க