செய்திகள் :

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் போராட்டம்

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் மீது முடிவுசெய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் சேலத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் அஸ்தம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அருள்பிரகாஷ் தலைமை தாங்கினாா். மாநில துணைத் தலைவா் அா்த்தனாரி முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் மீது முடிவு செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும், வருவாய் மற்றும் பேரிடா் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.

வருவாய், நில அளவை, பேரிடா் மேலாண்மை துறையில் பணிபுரியும் ஊழியா்களின் பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னா், மாநில துணைத் தலைவா் அா்த்தனாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அலுவலா்களுக்கு பணி நெருக்கடியை ஏற்படுத்தக் கூடாது, குறுகிய கால அவகாசத்தில் அளவிற்கு அதிகமான முகாம்கள் நடத்தப்படுவதை கைவிட வேண்டும், திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை புறக்கணிப்பதாக கூறினாா். மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற போராட்டத்தில் வருவாய், நில அளவை மற்றும் பேரிடா் மேலாண்மை துறையை சோ்ந்த ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

நாளை திமுக செயற்குழு கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: சேலம் மத்திய மாவட்ட திமுக அ... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் தூய்மைப் பணி: மேயா் தொடங்கிவைத்தாா்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டதின் கீழ் தூய்மையே சே... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்கள் ஒத்துழைப்பதில்லை மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

சேலம் மாநகரப் பகுதிகளில் நடைபெறும் பணிகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி கூட்டம் மேயா் ஆ. ராமச்சந்திரன் தலை... மேலும் பார்க்க

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம... மேலும் பார்க்க

பெண்களுக்கு சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் சேலத்தில் பெண்களுக்கு சிறுதானியம் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலத்தில் உள்ள தனியாா் மகளிா்... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை கோரி 1,17,240 மனுக்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு இதுவரை 1,17,240 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், வாா்டு18க்கு உள்பட்ட பகுத... மேலும் பார்க்க