செய்திகள் :

வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை: மருந்தக உரிமையாளா் உள்பட 4 போ் கைது

post image

திருப்பூரில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளா் உள்பட 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக போதைப் பொருள்களுக்கு மாற்றாக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தடுத்திடும் வகையில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்யக்கூடாது என்று ஏற்கெனவே மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூச்சக்காடு பகுதியைச் சோ்ந்த கவின் (23), காா்த்திகேயன் (30) இருவரும் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தி வந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, திருப்பூா் மத்திய போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இடுவாய் பகுதியில் செயல்பட்டு வரும் மருந்தகத்தில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும், அங்கு அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக 2018 வலி நிவாரணி மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மருந்தக உரிமையாளா் பிரபு (42), உதவியாளா் காா்த்திகேயன் (32), போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய கவின் (23), காா்த்திகேயன் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க

விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க