ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்: அமை...
வலைபாயுதே..!
twitter.com/Chithradevi_91
அதிகம் ஆங்கிலம் பேசப்படும் இடங்கள், பாரீன் நாடுகள் மற்றும் டாஸ்மாக் பார்கள்.
twitter.com/sasitwittz
பெண்கள் ஓட்டும் இருசக்கர வாகனங்களுக்கு பிரேக் ஷூ அவ்வளவு சீக்கிரம் தேய்ந்துபோவதே இல்லை... ஆனா செருப்பு ரொம்ப சீக்கிரம் தேய்ந்துபோகும்!
twitter.com/RoyalEnfieldu
இயற்கையுடன் இருக்கையில் ஒரு பேரமைதியை அடைந்துவிட்டால் எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் அதை நாம் அடைய முடியும்!
twitter.com/writerSJB56856832
கேரளாவில் பள்ளிகளில் வாட்டர்பெல் என்ற முறை உள்ளது. நீர் அருந்துவதற்கான நேரத்தை ஒதுக்கி அருந்த வைக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும் இந்த முறையைப் பின்பற்றலாமே?
twitter.com/drkvm
புதிய கட்சி தொடங்குகிறார் எலான் மஸ்க்.
# எத்தனை நாள் ‘இவரையே’ நம்புறது? நம்மளும் கட்சி ஆரம்பிக்கணும்: அதானி
twitter.com/Greesedabba2
புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!
# யார்றா இவன்? ‘அருணாச்சலம்' படத்துல இருக்கற காசை எல்லாம் ஒரு மாசத்துல கரைக்கணும்னு டிரை பண்ணுன ரஜினிக்கே டஃப் குடுப்பான் போல!
twitter.com/itz_radhi3
கவலை என்பது எல்லாருக்கும் பொதுதான். நடந்ததை நினைத்து சிலரும், நினைத்தது நடக்கவில்லை என சிலரும்!

twitter.com/Anvar_officia
Google கிட்ட சந்தேகம் கேட்கிறவன் மனுஷன், Grok கிட்ட சந்தேகம் கேட்கிறவன் பெரிய மனுஷன்!
twitter.com/urs_venbaa
நியாயமான விசாரணை நடந்தால் மீண்டும் இந்தியா வரத் தயார்: விஜய்மல்லையா அறிவிப்பு
# இப்ப என்ன, நீங்க குற்றமே செய்யாதவர்னு சொல்லணும்... அதானே?!
facebook.com/Shan Karuppusamy
ஐ.பி.எல் வருமானத்துக்கு பி.சி.சி.ஐ அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஏனென்றால் அது ஒரு சேவை தன்னார்வல நிறுவனமாம். ஸ்போர்ட்ஸ் க்ளப் வகையில் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 12,000 கோடி ரூபாய் வருமானம். வரி செலுத்தினால் அதுவே 4000 கோடிக்கு அருகே வரலாம். தனித்தனி ஃப்ரான்சைசுக்கு வரும் வருமானம் தனி. அவையும் வரி செலுத்தத் தேவையில்லை. ஏனென்றால் பி.சி.சி.ஐ மொத்தமாக வருமானத்தைக் கணக்குக் காட்டிவிட்டு பிறகு இவர்கள் தங்களுக்குள் பிரித்துக்கொள்வதால் இருக்கலாம். ஆனால் கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளுக்குச் செய்யும் செலவுகளுக்குக்கூட மத்திய அரசு கறாராக வரி விதிக்கிறது. வரி செலுத்தத் தாமதமானால் வட்டியோடு வசூலித்துவிடுகிறது. இதை ஒப்பிட்டு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் பேராசிரியர் எழுதிய கட்டுரை வைரலாகி வருகிறது. எப்படியெல்லாம் மக்கள் பணத்தை ஏமாற்றலாம் என்று பார்க்கும் இந்தக் கும்பலுக்கு கோஷமிடப் போய்த்தான் பெங்களூரில் கொத்துக் கொத்தாக இறந்துபோயிருக்கிறார்கள்.
twitter.com/ParamasivamRam7
வாழ்க்கையில் பெரிய ஆசையெல்லாம் இல்லை... ஏதோ இந்த ஏர்போர்ட்ல இறங்குனதும் நாலு நிருபர்கள் மைக்க நீட்டுற அளவுக்கு இருந்தா போதுங்க!

twitter.com/manipmp
புது ட்ரஸ் எடுத்தாலே பாதி ஸ்ட்ரெஸ் போயிடுது பெண்களுக்கு!
twitter.com/asdbharathi
தமிழகத்தின் எல்லா உணவகங்களிலும் சப்பாத்தி கிடைக்கும். வட இந்தியாவின் எந்த உணவகத்திலும் இட்லி கிடைக்காது. எப்போதும் கொடுப்பது எல்லாம் திரும்பக் கிடைத்துவிடுவதில்லை.
twitter.com/tamilarasanias
அப்பாக்களின் அவமானங்கள்தான், பல சமயங்களில் பிள்ளைகளின் டிகிரி ஆகிறது.
twitter.com/kumarfaculty
நான் ஓய்வுபெற்ற பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்
# ‘நாட்டாமை, தீர்ப்பை மாத்து'ன்னு யாரும் வராதீர்கள் என்று அர்த்தம்.
twitter.com/Sabarish_twittz
மனம் என்பது சில நேரங்களில் நினைவுகளின் குப்பைக்கூடம்...
twitter.com/arulrajmv1
ஏய், அந்த கத்திரி வெயில் கிட்ட யாராவது சொல்லுங்களேன்டா. மே மாசத்துல அடிக்க வேண்டிய வெயில் ஜூன் மாசத்துல வெளுத்து வாங்கிட்டிருக்கு!
twitter.com/arulrajmv1
கறி விருந்துல சொல்ற மாதிரி ஒன்னும் இல்லன்னு சொன்னா, அவங்களுக்கு மட்டன் பீஸ் சரியா கிடைக்கலன்னு அர்த்தம்.
twitter.com/Thaadikkaran
‘சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதைச் செஞ்சு சாப்பிடுங்க’ன்னு சொல்லிட்டு அடுத்த நாளே, ‘இதைச் சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா’ன்னு கேப்பானுங்க பாருங்க.. அத்தாத்தண்டி உருட்டா இருக்கும்.
twitter.com/GOV_INDA_RAJ
எத்தனை வருஷமானாலும் கல்யாண வீட்டில் நிஜாம் பாக்கு திருடுற புத்தி போகமாட்டேங்குது, இது என்ன வியாதின்னு கொஞ்சம் பாருங்க டாக்டர்!
twitter.com/Anda_talks
‘‘மச்சா, ஆபீஸ்லே Vacancy இருக்கு... வரியா?’’
‘‘இதுக்கு முன்னாடி இந்த Position-ல இருந்தவர் என்ன ஆனாரு..?’’
‘‘Job Pressure தாங்காம சூசைட் பண்ணிக்கிட்டாரு!’’
twitter.com/arulrajmv1
சின்ன ஹோட்டலில் சப்ளையர் ஆக இருந்தவர் பெரிய ஹோட்டல்களில் சேர்ந்த உடன் அவர் சமையல் மாஸ்டர் ஆவது போலதான், சின்னக் கட்சியில் இருந்து பெரிய கட்சிக்குப் போனவங்க டாப்பா இருக்காங்க...

facebook.com/Ramanujam Govindan
சில படங்கள் வெளி வந்த முதல் வாரம் எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன. பின்னர் இரண்டாவது வாரம் ‘பரவாயில்லை, பார்க்கலாம்’ என விமர்சனங்கள் வருகின்றன. தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு என் யோசனை, ‘‘நீங்க ஏன் திரைப்படங்களை நேரடியாக இரண்டாவது வாரமே ரிலீஸ் பண்ணக் கூடாது?’’
facebook.com/Arun Kumar
நம் முந்தைய தலைமுறையினரைப் பார்க்கும் போது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், வேலை செய்தவர்கள் என அவர்களுடன் உள்ள உறவைத் தொடர்ந்துவருவது எப்போதும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கும் ஒன்று. இப்போது எல்லாம் நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் பேசுவதுகூட இல்லை. உடன் வேலை செய்பவர்களை வேலை தாண்டி வெளியில் சந்திப்பது என்பதே நிகழ்வதற்கு சாத்தியமில்லாத ஒன்றாக ஆகிவிடுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் நம் முந்தைய தலைமுறையினர் அவர்களுடன் உறவுகளைத் தொடர்ந்து கொண்டு செல்வது, எல்லா விசேஷங்களுக்கும் செல்வது, தங்களது உறவையும் நட்பையும் நினைவுகூர்வது என்று அழகான ஒன்றாக இருக்கிறது.
இதைப் பற்றி இன்னும் யோசித்துப் பார்த்தால், அவர்களின் காலத்தில் திடீரென்று தேவைப்படும் நிதி உதவிகளுக்கும், பிற உதவிகளுக்கும் பக்கத்து வீட்டார் மற்றும் உடன் பணிபுரிபவர்களைச் சார்ந்திருந்திருக்கிறார்கள். சிறுவயதில் காபிப் பொடி வாங்கிச் செல்வது, ரெண்டு தக்காளி கொடுங்க என்று வாங்கிச் செல்வதை நாமே பார்த்திருப்போம். ஆனால் இப்போது நம் வீட்டில் அது நிகழுமா? அல்லது அப்படியான ஒன்றை நினைத்துப் பார்க்க முடியுமா?
அதற்கு முக்கியக் காரணம், இப்போது பெரும்பாலும் தன்னிறைவு அடைந்து விடுகிறார்கள். பொருளாதார ரீதியில் பெரும்பாலும் யாரையும் சார்ந்திருக்கும் நிலை இருப்பதில்லை. இருந்தாலும் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களை யாரும் நம்பி கொடுப்பதும் இப்போது நடப்பதில்லை. எங்கேயாவது ஒன்றிரண்டு இடங்களில் நடந்தாலே அதிசயம் என்கிற நிலையில்தான் இருக்கிறது.
நம் சிறுவயதில் காலனிகளில் நடக்கும் கதை, லைன் வீடுகளில் நடக்கும் கதை என படங்களிலும் சீரியல்களிலும் நிறைய வரும். ஆனால் இப்போது எல்லாம் அப்படி வருவதே இல்லை. ஒரு வாழ்க்கை முறையே முன்னர் இருந்தது இப்பொழுது முழுவதுமாக இல்லாமல் ஆகிவிட்டது.