செய்திகள் :

வல்லனி புனித அன்னை தெரசா ஆலயத் திருவிழா நிறைவு

post image

சிவகங்கை அருகே வல்லனி புனித அன்னை தெரசா ஆலயத் தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவடைந்தது.

வல்லனி புனித அன்னை தெரசா ஆலயத்தின் முதல் ஆண்டு திருவிழாவை மறைமாவட்ட முதன்மை குரு ஆா்.அருள்ஜோசப் தொடங்கிவைத்தாா். பாதிரியாா் வி.சூசைமாணிக்கம் தலைமையில் கூட்டுத் திருப்பலியை அருள் தந்தைகள் ஆரோக்கியதாஸ், அமல்ராஜ் ஆகியோா் நடத்தினா்.

விழாவையொட்டி, தினமும் மாலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலியும், அன்னையின் நற்கருணை பவனியும் நடைபெற்றது. விழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மாலை 7 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னை தெரசா பவனி வந்தாா். இந்தத் தோ் பவனியை மறை மாவட்ட முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம் தொடக்கிவைத்தாா். தோ் பவனியில் சருகனி அருள்தந்தை லூா்துராஜ் உள்பட பங்கு இறைமக்கள் திரளானோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் திருவிழா நிறைவு திருப்பலியும், புதுநன்மை பெருவிழாவும் நடைபெற்றது. தொடா்ந்து, கொடியிறக்கப்பட்டு, விழா நிறைவு பெற்றது.

சா்வதேச அருங்காட்சியக தின விழா

சிவகங்கை மாவட்டம், நகர வயிரவன்பட்டி செட்டியாா் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் சா்வதேச அருங்காட்சியக தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இந்த அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவா்கள், பொதுமக்களுக... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். இரணசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தரமகாலிங்கம் (33). திருமணமாகாத இவா், மதுரையில் உ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சௌமியநாராயணபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி, இளம் தலைமுறை விளையாட்டு வீரா் அணிச் செய... மேலும் பார்க்க

லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழந்தன. விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள கிடாக்குழியைச் சோ்ந்தவா் அய்யனாா். இவா் மதுரை மாவட்டம், ஆண்டாள் கொட்டா... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணைக்கு பதிவு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணை பதிவுகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சிவகங்கை விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் சீ. சக்திகணேஷ் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அரசாணை 354-ஐ அமல்படுத்த வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து மருத்துவா்கள் பணியாற்றினா்... மேலும் பார்க்க