செய்திகள் :

வளர்ப்பு நாயின் நகம் பட்டு உடலில் காயம்: ரேபிஸ் தொற்றால் காவல்துறை ஆய்வாளர் உயிரிழப்பு!

post image

வளர்ப்பு நாய்கள் நகத்தால் சீண்டினாலும் ரேபிஸ் வரலாம்; ஆகவே, எச்சரிக்கை அவசியம் என்பதை அண்மையில் குஜராத்தில் நிகழ்ந்ததொரு துயர சம்பவம் எடுத்துரைக்கிறது.

குஜராத் காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றிய வன்ராஜ் மஞ்சாரியா என்பவர் தமது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாயை வளர்த்து வந்துள்ளார். தன் வீட்டின் ஒரு குடும்ப உறுப்பினராக அவர் பாவித்து வளர்த்து வந்த அந்த செல்லப் பிராணிக்கு அவர் சரிவர தடுப்பூசியும் செலுத்தி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் அவரது உடலில் நாயின் நகம் பட்டு காயம் உண்டாகியுள்ளது. ஆனால் அதை அவர் பெரிதக எடுத்துக்கொள்ளவில்லை. உரிய தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நாய் நகத்தால் சீண்டிய சில நாள்களிலேயே திடீரென அதிகப்படியான காய்ச்சல், தண்ணீரைக் கண்டாலே ஒருவித அச்ச உணர்வும் நடுக்கமும் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. மேற்கண்ட அறிகுறிகள் ரேபிஸ் தொற்று உடலில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதையே காட்டுகின்றன.

இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ரேபிஸ் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு மருத்துவ கன்காணிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த காவல்துறை அதிகாரியொருவர் வளர்ப்பு நாயின் நகம் சீண்டியதால் உடலில் காயம் ஏற்பட்டதுடன் அதனால் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்திருக்கும் சம்பவம் செல்லப் பிராணிகளை வளர்க்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?

வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால் மட்டும் ரேபிஸ் போன்ற நோய்த் தொற்று ஏற்படாது என்று 100 சதவீதம் உறுதியாக உத்தரவாதம் அளித்துவிட முடியாது. பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம். எனினும், அவ்வகை விலங்குகள் கடித்தாலோ சீண்டினாலோ, அதன்மூலம் காயம் உண்டானாலோ உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

Ahmedabad Police Inspector Dies of Rabies After Pet Dog Scratch

கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!

கொல்கத்தாவில் நீடிக்கும் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே, கனமழை, காற்றின் காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததிலும் மின்... மேலும் பார்க்க

சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்ததும் ஆசாம் கான் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப்பெறப்படும்: அகிலேஷ்

சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஆசாம் கான் மீதான அனைத்து பொய் வழக்குகளும் திரும்பப்பெறப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். பல்வேறு வழக்குகளில் சீதாபூர் சிறையில் அடைக்கப்பட... மேலும் பார்க்க

எச்1பி விசா கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? வைரலாகும் பெண்ணின் பதிவு!

எச்1பி விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.விசா கட்டண உயர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் ம... மேலும் பார்க்க

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான் விடுதலை!

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான் 23 மாதங்களுக்குப் பின் இன்று (செப். 23) சீதாபூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.மூத்த தலைவர் ஆசாம் கான் சீதாபூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். க... மேலும் பார்க்க

விப்ரோ நிறுவனரிடம் உதவிக் கோரும் கர்நாடக முதல்வர்!

பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவிக் கோரி, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் ... மேலும் பார்க்க

ராகுலின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்; பாஜகவினர் அல்ல! சரத் பவார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டுமே தவிர, பாஜகவினர் அல்ல என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க