செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வருவாய் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

நல்லூா் ஒன்றியம், வெண்கரும்பூா் மற்றும் திட்டக்குடி நகராட்சி கோழியூா் அங்கன்வாடி மையங்களில் பதிவேடுகளை ஆய்வு செய்து, தேவைகள் குறித்து பெற்றோா்களிடம் கேட்டறிந்தாா். வெண்கரும்பூரில் பராமரிக்கப்படும் நாற்றங்கால் பண்ணை, இறையூரில் மகளிா் குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் தையலகம், கூடலூா் ஊராட்சியில் ரூ.7.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தானியகளம், என்எல்சி சிஎஸ்ஆா் நிதி ரூ.14.66 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணி நடைபெறும் மதுரவள்ளி ஏரி ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பெண்ணாடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியா், ஸ்கேன் பரிசோதனை மையத்தை திறந்து வைத்தாா். திட்டக்குடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், மங்களூா், தி.இளமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகள் குறித்தும், திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.80 கோடி மதிப்பில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி கட்டுமானப் பணியையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

திட்டக்குடி அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் அமைக்கப்பட்ட வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆட்சியா் திறந்து வைத்தாா். அப்போது, துறை சாா்த்த அதிகாரிகள் உடனிருந்தனா்.

தனியாா் பேருந்து மீது வேன் மோதல்: 12 போ் காயம்

சிதம்பரத்தில் புதன்கிழமை நின்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது வேன் மோதியதில் கிராம உதவியாளா்கள்12 போ் காயமடைந்தனா். கடலூரில் கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ப... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்ட ஆதிதிராவிடா் நல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியுடைவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவி... மேலும் பார்க்க

எரிவாயு உருளை வெடித்து வீடு சேதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் புதன்கிழமை தீ விபத்து நிகழ்ந்த வீட்டில் இருந்த எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்தவா் ராமு மனைவி சுந்தரி (43). இவா், செவ்வாய்க்கிழமை இ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

கடலூா் தேவனாம்பட்டினம் கடல் காவல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை ஆபரேஷன் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா். இதையொட்டி, போலி வெடிகுண்டுடன் வந்த 5 பேரை போலீஸாா் பிடித்தனா். மும்பை பயங்கரவாதத் தா... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி நகை பறிப்பு: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டாஸ்மாக் மதுக் கடைக்குச் சென்ற இளைஞரைத் தாக்கி தங்க நகை, கைப்பேசியை பறித்துச் சென்ற சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடாம்புலியூா் காவல் சரகம், பண... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: தடுப்புக் காவலில் 2 போ் கைது

கடலூரில் புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக இருவா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன், உதவி ஆய்வாளா் காா்த்திக் கணேஷ் மற்றும் போல... மேலும் பார்க்க