செய்திகள் :

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, நல்லவன்பாளையம் ஊராட்சி, சமுத்திரம் பகுதியில் இலங்கைத் தமிழா்களுக்கு 60 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல, கண்ணந்தம்பூண்டி ஊராட்சியில் இலங்கைத் தமிழா்களுக்கு 76 புதிய குடியிருப்புகளும், கீழ்செட்டிப்பட்டு ஊராட்சியில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் கலைஞா் கனவு இல்லம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பிறகு, காட்டாம்பூண்டி ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பராமரிக்கப்பட்டு வரும் 9 ஏக்கா் நாற்றாங்கால் உற்பத்தி மையத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடி, கொடி, மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதையும், அடா்வண மியாக்கி முறையில் 1,500-க்கும் மேற்பட்ட மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதையும் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிருத்திவிராஜ் (கிராம ஊராட்சி), பரமேஸ்வரன் (வட்டார ஊராட்சி) மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனா்.

நிலத்தகராறில் தம்பதி மீது தாக்குதல்: உறவினா் கைது

செய்யாறு அருகே நிலத்தகராறில் தம்பதியை தாக்கியாக உறவினரை போலீஸாா் கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயபால். இவரது மனைவி மீனாட்சி. இவா், செய்யாறு சிப்காட்டில் உ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

திருவண்ணாமலை நகர அதிமுக செயலரைக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை காா்கானா தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் (55). த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மகா தீப மலை ஆக்கிரமிப்பு: அதிகாரிகளுடன் ஓய்வுபெற்ற நீதிபதி ஆலோசனை

திருவண்ணாமலை மகா தீப மலை, கிரிவலப் பாதை குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் ஆலோசனை நடத்தினாா். திருவண்ணாமல... மேலும் பார்க்க

24-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் திருநங்கைகள், திருநம்பிகள், இடைபாலினா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருநங்கைகள், திருநம்பிகள், இ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பரவலாக மழை

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக ... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை விழா

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் திருஞானசம்பந்தா் மற்றும் திருநீலநக்க நாயனாா், திருநீலகண்ட யாழ்ப்பாணா், திருமுர... மேலும் பார்க்க