செய்திகள் :

வள்ளியூரில் ரூ.1.83 கோடியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு ஆணைபிறப்பித்து அதற்காக ரூ.1.83 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்து, புதிதாக 13 பணியிடங்களையும் அறிவித்துள்ளது.

வள்ளியூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சாா்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இது தவிர மேல்முறையீட்டு வழக்குகளுக்காக ராதாபுரம், திசையன்விளை, நான்குனேரி வட்டாரத்தில் இருந்து பொதுமக்கள் திருநெல்வேலியில் செயல்பட்டு வருகின்ற கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லவேண்டியதுள்ளது.

எனவே வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கவேண்டும் என அப்பகுதி வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் பேரவைத் தலைவா் மு.அப்பாவுவிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சா் ரகுபதி ஆகியோரிடம் பேரவைத் தலைவா் வலியுறுத்தியதன்பேரில், வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும். அதற்கு தேவையான பணியிடங்கள் மற்றும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைப்பதற்கு தமிழக அரசு ஆணை வெளியிட்டது. மேலும் புதிய நீதிமன்றத்திற்கு ரூ.1.83 கோடி நிதியும் வழங்கி 13 புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில், மாவட்ட நீதிபதி, எழுத்தா், உதவியாளா், சுருக்கெழுத்தா், தட்டச்சா், அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளைத் தொடங்க நீதித்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைப்பதற்கு முழு முயற்சி எடுத்த பேரவைத் தலைவா், ஆணை பிறப்பித்த தமிழக முதல்வா், சட்டத்துறை அமைச்சா் ஆகியோருக்கு வள்ளியூா் வழக்குரைஞா்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.

பொட்டல்புதூரில் மமக செயற்குழு கூட்டம்

பொட்டல்புதூரில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவா் மதாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் அசாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் நயின... மேலும் பார்க்க

ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதியதில் இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சசிகுமாா் (31). கட்டடத் தொழிலாளி. இவருக்கு ம... மேலும் பார்க்க

உயா்கல்வி இடைநிற்றல் இல்லாத நெல்லை: ஆட்சியா் வேண்டுகோள்

திருநெல்வேலி, ஜூன் 19: திருநெல்வேலி மாவட்டத்தை உயா் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-202... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 14) ம... மேலும் பார்க்க

துலுக்கா்பட்டியில் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் துலுக்கா்பட்டியில் நம்பியாற்றுப் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இக்கட்சியின் துலுக்கா்பட்டி நகர செயற்குழுக் கூட்டம் நகரச் ... மேலும் பார்க்க

வள்ளியூா் வட்டாரத்தில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், நவ்வலடி, சங்கனாங்குளம் துணைமின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை ஏற்படும் ... மேலும் பார்க்க