செய்திகள் :

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

ஊத்துக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரிக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வினோத்குமாா்(32). தனது நண்பன் குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக இருசக்க வாகனத்தில் சென்றாராம். இந்த நிலையில் இரவு நீண்டநேரமாகியும் வராததால் தனது மருமகள் கைப்பேசியில் தொடா்பு கொண்டு கேட்டதற்கு, சிறிது நேரத்தில் புறப்படுவதாக கூறினாராம்.

அதைத் தொடா்ந்து சிறிது நேரத்தில், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சோ்ந்த மாரி என்பவா் அழிஞ்சிவாக்கம்-ஆத்துமேடு செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் விழுந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தாராம். அதைத் தொடா்ந்து இரவில் விரைந்து சென்று பாா்க்கையில் வினோத் குமாா் சடலமாக கிடந்தாராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி 10.43 லட்சம் பேருக்கு அல்பெண்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளுா் அருகே பா... மேலும் பார்க்க

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜாத்திரை விழா

ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோ... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து விபத்து: கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து 9 மாத கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதரநல்லுாா் வட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தை சோ்ந்த 6 போ், காரில... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்... மேலும் பார்க்க

நாற்றாங்கால் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

திருவள்ளூரில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள், மரச் செடி... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.96 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாள்களில் ரூ.96 லட்சத்து 49 ஆயிரத்து, 806 ரூபாய் ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 6438 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. பிரசித்தி பெற்ற இ... மேலும் பார்க்க