செய்திகள் :

World's Ugliest Dog: `உலகின் அவலட்சணமான நாய்' போட்டியில் ரூ.4.3 லட்சம் பரிசு - ஏன் தெரியுமா?

post image

கலிபோர்னியாவின் சான்டா ரோசாவில் உள்ள `சோனோமா கவுண்டி' கண்காட்சியில் கடந்த வாரம் நடைபெற்ற உலகின் மிக அவலட்சணமான நாய்கள் போட்டியில், இரண்டு வயது மதிக்கதக்க முடி இல்லாத பிரெஞ்சு புல்டாக் பெடுனியா என்ற நாய் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஓரிகனின் யூஜீனைச் சேர்ந்த இந்த நாயும் அதன் உரிமையாளர் ஷானன் நைமனும் ரூ.4.3 லட்சம் ($5,000) பரிசை வென்றனர்.

கடந்த ஆண்டு, வைல்ட் தாங் என்ற பெக்கிங்கீஸ் இன நாய், ஏற்கனவே ஐந்து முறை இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது.

உலகின் மிக அவலட்சணமான நாய் போட்டியின் பின்னணி

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் போட்டி, "எல்லா நாய்களையும் சிறப்பாகவும் தனித்துவமாகவும் காண்பிக்க வேண்டும் அதன் குறைபாடுகளை பொருட்படுத்தாமல் கொண்டாடப்பட வேண்டும்

இந்தப் போட்டி, அனைத்து விலங்குகளையும் அன்புடன் ஏற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தையும், தத்தெடுப்பதன் நன்மைகளையும் வலியுறுத்துகிறது," என்று கூறப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு ரோஸ் ஸ்மித் என்பவர் சமூகத்தின் ஓல்ட் அடோப் அசோசியேஷனுக்காக நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்வை தொடங்கினார். 1988 முதல் கண்காட்சியாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வு நாய்களின் பாதுகாப்பையும், அவற்றின் தோற்றம் எப்படி இருந்தாலும் மக்கள் தத்தெடுக்கவும் ஊக்குவிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Nilgiris: அரிசி, பருப்பு எல்லாமே காலி, இரவோடு இரவாக ரேஷன் கடையை முடித்த யானைகள்

நீலகிரி மலையில் இயற்கையான வாழிடச் சூழல்களை இழந்துத் தவிக்கும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்பு பகுதிகளிலும் விளை நிலங்களிலும் நடமாடி வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் முறையற்ற வக... மேலும் பார்க்க

கோவை: 25 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. அவை உணவுக்காக காடுகளில் இரு... மேலும் பார்க்க

``உலகின் மிகச்சிறிய பாம்பு; 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது..'' - சூழலியல் நிபுணர்கள் சொல்வதென்ன?

உலகின் மிகச் சிறிய பாம்பாக அறியப்படும் பார்படோஸ் த்ரெட் பாம்பை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்தப் பாம்பு இழை போன்ற மெல்லியதாக இருக்குமாம், அதன் முழு வளர்ச்... மேலும் பார்க்க

Nilgiris: மழையால் பசுமை; மகிழ்ச்சியோடு பசியாறும் யானை கூட்டங்கள்.. கவர்ந்திழுக்கும் நீலகிரி மலை!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாகவும், அதிக எண்ணிக்கையிலான யானைகளின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டம். பெருந்தோட்ட நிறுவனங்களின் பெயரால் கடந்த 200 ஆ... மேலும் பார்க்க