செய்திகள் :

``உலகின் மிகச்சிறிய பாம்பு; 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது..'' - சூழலியல் நிபுணர்கள் சொல்வதென்ன?

post image

உலகின் மிகச் சிறிய பாம்பாக அறியப்படும் பார்படோஸ் த்ரெட் பாம்பை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது.

இந்தப் பாம்பு இழை போன்ற மெல்லியதாக இருக்குமாம், அதன் முழு வளர்ச்சி அடையும் போது 10 சென்டிமீட்டர் நீளமே இருக்குமாம்.

Photograph: Connor Blades

இந்த வகையான பாம்பு அழிந்து விட்டதாக நிபுணர்கள் எண்ணிய நிலையில் பார்படோஸ் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ரீ:வைல்டு (Re:wild) பாதுகாப்பு அமைப்பு இணைந்து நடத்திய சூழலியல் ஆய்வின் போது, மத்திய பார்படோஸில் ஒரு பாறையின் கீழ் இந்த பாம்பை கண்டறிந்துள்ளனர்.

2000-களின் தொடக்கத்திலிருந்து இந்த பாம்பு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது உலகளவில் ”அறிவியலுக்கு இழந்த” இனங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் பார்படோஸ் த்ரெட் பாம்பை சூழலியல் ஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர்.

பார்படோஸ் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில் ”ஒரு வருடத்திற்கு மேலாக இந்த பாம்பு மற்றும் பிற அரிய ஊர்வன இனத்தை தேடி வந்ததாகவும் தற்போது கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உலகின் மிகச்சிறிய பாம்பு மீண்டும் கண்டுபிடிப்பு; 20 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
Barbados threadsnake

1889 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட இந்த த்ரெட் பாம்பு பாலியல் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டது. பெண் பாம்புகள் ஒரு முறை ஒரு முட்டை மட்டுமே இடுகின்றன. இது ஊர்வன உலகில் அரிதானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

விவசாய வளர்ச்சியால் வாழிட இழப்பை இந்த பாம்புகள் எதிர்கொண்டு வருவதால் இவை அழிவின் விளிம்பில் இருப்பதாக பாதுகாப்பு ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் உலகின் மிகச் சிறிய பாம்பு வகையை கண்டுபிடித்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nilgiris: மழையால் பசுமை; மகிழ்ச்சியோடு பசியாறும் யானை கூட்டங்கள்.. கவர்ந்திழுக்கும் நீலகிரி மலை!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாகவும், அதிக எண்ணிக்கையிலான யானைகளின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டம். பெருந்தோட்ட நிறுவனங்களின் பெயரால் கடந்த 200 ஆ... மேலும் பார்க்க

வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை; முழு மரியாதையுடன் தகனம்.. நெகிழவைக்கும் கதை!

ஆசியாவின் அதி மூத்த யானை என்று கருதப்பட்ட 100 வயதைக் கடந்த வத்சலா யானை மத்திய பிரதேச மாநிலத்தில் உயிர் நீத்தது. பன்னா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த வத்சலா, வெறும் யானை மட்டுமல்ல காட்டின் அமைதியைக... மேலும் பார்க்க

Tiger: மர்மமாக இறந்து கிடந்த 5 புலிகள்.. விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? வனத்துறை அதிர்ச்சி!

உலக அளவில் வங்கப் புலிகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள ஆகிய இந்த மூன்று மாநிலங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதிலும் குறிப்பாக மும்மாநிலங்கள் இணையும் முச்சந்திப்பு வனப்பகுதியில... மேலும் பார்க்க