செய்திகள் :

வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை; முழு மரியாதையுடன் தகனம்.. நெகிழவைக்கும் கதை!

post image

ஆசியாவின் அதி மூத்த யானை என்று கருதப்பட்ட 100 வயதைக் கடந்த வத்சலா யானை மத்திய பிரதேச மாநிலத்தில் உயிர் நீத்தது.

பன்னா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த வத்சலா, வெறும் யானை மட்டுமல்ல காட்டின் அமைதியைக் காத்துவந்த தலைமுறைகள் கடந்த தோழி என மத்திய பிரதேச முதலமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வத்சலா யானையை முழு மரியாதையுடன் தகனம் செய்துள்ளனர் வனத்துறையினர். சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் யானையாக வத்சலா இருந்துள்ளது.

எந்த ஒரு மூத்த பெண் யானைக்கும் அதன் கூட்டத்தில் பல பொறுப்புகள் இருக்கும். தலைமை தாங்கி வழிநடத்துவது மட்டுமல்லாமல் வத்சலா அங்கே குட்டி ஈனும் இளம் பெண்களுக்கு ஒரு பாட்டியை போல ஆதரவாக இருந்துள்ளது.

Vatsala
Vatsala

வத்சலா தந்தம் இல்லாத ஆசிய பெண் யானை. இது கேரளாவின் நீலாம்பூர் வனப்பிரிவின் அடர்ந்த காடுகளுக்குள் பிறந்தது. 1972-ம் ஆண்டு மத்தியபிரதேசத்துக்கு கொண்டுவரும்போதே அதன் வயது 50 என்கின்றனர்.

நர்மதாபுரத்தில் வசித்துவந்த அந்த யானை 1993-ம் ஆண்டு பன்னா புலிகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்தது முதல் 2004ம் ஆண்டு வரை வத்சலா காடுகளில் பொருள்களை எடுத்துச் செல்ல, கனமான மரங்களைத் தூக்கிவர பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற பின்னர், அனுபவமிக்க மூத்த யானையாக, மென்மையான பாதுகாவலராக, காட்டின் பாட்டியாக வாழ்ந்தது. இதனை 'தாதி மா' என சரணாலத்தினர் அன்போடு அழைத்துள்ளனர்.

வத்சலாவின் இறுதி காலத்தில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. செரிமான பிரச்னைகள் மற்றும் (2020 முதல்) பார்வை இழப்பால் அவதிப்பட்டதால் ஹினாட்டா முகாமுக்கு மாற்றியுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் அதற்கு கஞ்சி ஊட்டி பேணி வந்துள்ளனர். இறுதிகாலத்தில் மணிராம் என்ற நபர் காட்டுப்பாதையில் யானையின் தந்தைத்தைப் பிடித்துக்கொண்டு நடைக்கு கூட்டிச் சென்று வந்துள்ளார்.

வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை
வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை

வத்சலாவின் வயதை அதிகாரப்பூர்வமாக கூறும் ஆவணங்கள் இல்லை. இதனால் கின்னஸ் உலக சாதனைகளில் விண்ணப்பிக்க முடியவில்லை. எனினும் வத்சலாவுக்கு 105 வயது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வத்சலாவின் வாழ்க்கையில் சவால்கள் இல்லாமல் இல்லை. 2003ம் ஆண்டு மற்றும் 2008ம் ஆண்டுகளில் ராம் பகதூர் என்ற ஆண் யானையால் தாக்கப்பட்டுள்ளது.

முதலில் நடந்த தாக்குதலில் வத்சலாவின் குடல் வெளியில் வரும் வரை தந்தத்தால் கடுமையாக தாக்கியுள்ளது ராம் பகதூர். வனவிலங்கு கால்நடை மருத்துவர் சஞ்சீவ் குமார் குப்தா 200 தையல்கள் போட்டு அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளார். 2008-ல் நடந்த தாக்குதலில் ஆழமான காயங்களை குணப்படுத்தியுள்ளார் மருத்துவர் சஞ்சீவ்.

வத்சலாவுக்கு சொந்த குழந்தைகள் கிடையாது. ஆனால் பல குட்டிகளை தன் சொந்த குட்டிகள் போல பாதுகாத்திருக்கிறது. சுற்றுலாப்பயணிகளை அடிக்கடி தொந்தரவு செய்து தன் கம்பீரத்தை காட்டும் வத்சலாவின் பிரிவு மொத்த சரணாலயத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tiger: மர்மமாக இறந்து கிடந்த 5 புலிகள்.. விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? வனத்துறை அதிர்ச்சி!

உலக அளவில் வங்கப் புலிகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள ஆகிய இந்த மூன்று மாநிலங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதிலும் குறிப்பாக மும்மாநிலங்கள் இணையும் முச்சந்திப்பு வனப்பகுதியில... மேலும் பார்க்க

நெல்லை: குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் உலா.. வீடு புகுந்து எண்ணெய் குடித்துச் சென்ற கரடி!

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகிறது. இதில், கரடிகள் உணவுக்காகவும... மேலும் பார்க்க