என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்: ராமதாஸ்
என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இனிஷியல் போட்டுக் கொள்ளலாம் என்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு தந்தையும் அக்கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் இன்று(ஜூலை 10) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி குறித்து ராமதாஸ் சூசகமாகப் பேசினார். அவர் பேசுகையில், “என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது.
செயல் தலைவர் என்றுதான் சொல்கிறோம். மக்களைச் சென்று பாருங்கள். மக்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஐந்து வயது குழந்தைதான், 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக்கியது” என்று பேசினார்.
முன்னதாக, வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தையைபோல ராமதாஸ் மாறிவிட்டார், அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அன்புமணி கூறியிருந்த நிலையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக ராமதாஸ் பேசியுள்ளார்.
எதிர் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Party founder Ramadoss has hinted to PMK leader Anbumani that he should not use my name and that he can use his initials.
இதையும் படிக்க: திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!