செய்திகள் :

சர்வதேச போட்டிகளில் சேலம் பாரா வீரர்கள்; பயணச் செலவுக்கு அரசை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவலம்

post image

சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சர்வதேச பாரா டேக்வாண்டோ போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளைச் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச டேக்வாண்டோ போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்று இந்த வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

இம்மாதம் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச பாரா டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்பதற்காகத் தகுதி பெற்றுள்ளதுடன், கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்றதற்குத் தேவையான பயணச் செலவை தமிழ்நாடு அரசு முழுமையாக வழங்கிய நிலையில் நடப்பாண்டில் அரசுக்குக் கோரிக்கை வழங்கியும், இதுவரை அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வராமல் உள்ளது.

இன்னும் இரு வாரங்களில் போட்டிக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டிய நிலையில், தமிழக அரசு விரைவாக பயணச் செலவை வழங்க வேண்டும் என்பது பாரா வீரர்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாரா டேக்வாண்டோ வீரர்கள்
பாரா டேக்வாண்டோ வீரர்கள்

கைகள் இழந்த நிலையில் கே-44 பிரிவில் இருவரும், உடலுறுப்புச் சவாலுடையோருக்கான பும்சே எனப்படும் உடல் திறனை வெளிப்படுத்தும் பிரிவில் 6 பேரும் என மொத்தம் 8 பேர் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச டேக்வாண்டோ போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

தங்களுக்கு நேரிட்ட உடல் பாதிப்பைப் பொருட்படுத்தாமல், மிகவும் ஏழ்மை நிலையிலும், தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, விடாமல் போராடும் இந்த வீரர்கள் கடந்த முறை 7 பிரிவுகளில் பதக்கங்களை வென்றனர்.

இந்த முறையும் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கான சூழலை தமிழ்நாடு அரசு வெகு விரைவில் ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Dhoni: 'இளமைக் குறும்பு; கேமரா காதலன்!' - தோனியின் விகடன் க்ளிக்ஸ்!

Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறார்?Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/3PaAEiYவண... மேலும் பார்க்க

Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறார்?

'தோனியின் பிறந்தநாள்!'தோனி, இந்திய கிரிக்கெட்டின் ஆச்சர்ய பெயர் இது. தோனியின் மீதான ரசிகர்களின் கொண்டாட்டமும் ஈர்ப்பும் ஒவ்வொரு முறையும் பிரமிப்பை மட்டுமே கொடுத்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்... மேலும் பார்க்க

'என் அக்காவுக்காகதான் எல்லாமே...' - கேன்சரால் பாதிக்கப்பட்ட சகோதரி குறித்து உருகிய ஆகாஷ் தீப்!

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் தீப்.ஆகாஷ்... மேலும் பார்க்க

Eng v Ind : 'அந்த 2 இடத்துலதான் கோட்டை விட்டுட்டோம்!' - தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ்!

'இங்கிலாந்து தோல்வி!'இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு தோல்விக்கான காரணங்க... மேலும் பார்க்க

Gill : 'நான் அடிச்சு சீரிஸையே ஜெயிக்கணும்!' - வெற்றிக்குப் பின் கில் உறுதி!

'இந்தியா வெற்றி!'பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதத்தைய... மேலும் பார்க்க

Liverpool: உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.140 கோடி; ஒப்பந்த தொகையை அப்படியே வழங்கிய அணி!

லிவர்பூல் கால்பந்து அணியின் வீரர் டியாகோ ஜோட்டா சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. 28 வயது போர்த்துகீசிய வீரரான ஜோட்டாவின் மரணம் கால்பந்து வீரர்கள் மற... மேலும் பார்க்க